ஞானக்கூத்தன் கவிதைகள்

விடுமுறை தரும் பூதம்

ஞாயிறு தோறும் தலைமறை வாகும்

வேலை என்னும் ஒரு பூதம்

திங்கள் விடிந்தால் காதைத் திருகி

இழுத்துக் கொண்டு போகிறது

ஒருநாள் நீங்கள் போகலை என்றால்

ஆளை அனுப்பிக் கொல்கிறது

மறுநாள் போனால் தீக்கனலாகக்

கண்ணை உருட்டிப் பார்க்கிறது

வயிற்றுப் போக்கு தலைவலி காய்ச்சல்

வீட்டில் ஒருவர் நலமில்லை

என்னும் பற்பல காரணம் சொன்னால்

ஏற்றுக் கொள்ள மறுக்கிறது

வாரம் முழுதும் பூதத்துடனே

பழகிப் போன சிலபேர்கள்

தாமும் குட்டிப் பூதங்களாகிப்

பயங்கள் காட்டி மகிழ்கின்றார்

தட்டுப் பொறியின் மந்திரகீதம்

கேட்டுக் கேட்டு வெறியேறி

மனிதர் பேச்சை ஒருபொருட் டாக

மதியாதிந்தப் பெரும்பூதம்

உறைந்து போன இரத்தம் போன்ற

அரக்கை ஒட்டி உறை அனுப்பும்

‘வயிற்றில் உன்னை அடிப்பேனெ’ன்னும்

இந்தப் பேச்சை அது கேட்டால்

Share with your friends !