ஞானக்கூத்தன் கவிதைகள்

என் உலகம்

என் உலகம் சிறியது

அங்கே

மூங்கில் ஆல் ஆன வேலி ஒன்றும்

அந்த வேலிஇல் இருக்கும் ஓணான் ஒன்றும்

உண்டு ;

குச்சிப் பூச்சியும் ஒன்றுண்டதிலே

வீட்டுக்கும் இல்லை;

வீட்டுப் பக்கம் வளர்ந்து

கனியாத மரத்துக்கும் இல்லை வேலி

வேலியைப் போட்டதும் நானில்லை

மரத்தைப் பற்றி கூறினேன் அல்லவா?

இன்னும் ஒன்றைச் சொல்லணும்

மரத்தின் கிளையில் தொங்கும்

கூடொன்றுண்டு. பழங்கூடு

இத்தனை சொன்ன பின் எனது

உலகம் எப்படிச் சிறிய தென்று

யாரேனும் என்னைக் கேட்கக் கூடுமோ

எனது உலகம் சிறியது

ஓணானும் குச்சிப் பூச்சியும்

வேலிப் படலில் காணாத போது நான்

கூட்டுக்குப் போய்விடுவேன்: ஏனென்றால்

அங்கே எனக்குச் சூரியன்

அந்தியைக் காட்டுவான் அணுவளவாக

Share with your friends !