ஞானக்கூத்தன் கவிதைகள்

எதை எடுத்துக் கூறுவது

எதை எடுத்துக் கூறுவது நீஙகள்

இடமொன்றைத்

தெரிவிக்க வேண்டுமென்றால்

ஆலமரம் ஒன்றுண்டு

அதற்கு நேரே

கிளைவிட்டுப் போகிறதில் தெற்கு நோக்கிப்

போகுமொன்றில் தொடர்ந்து செல்லக்

கிட்டும் என்போம்

கோலை நட்டுக் கட்டாத அச்சுத் தேர்க்கு

மேற்காகப் பிரிகின்ற தெருவில்

என்போம்

தோப்புகளின் தலைவிளிம்பு பொக்கைப் போரை

ஆனதற்குப் பக்கத்தில்

உள்ள தென்போம்.

இன்ன பொருள் இத்திசையில் அதற்குப் பக்கம்

இஃதிருக்கப் பாரென்று சொல்லக் கூடும்

எதை எடுத்து நான்கூற கேட்கப்பட்டால்

எல்லாமும் அழல் தின்னக் கொள்ளும் போது

Share with your friends !