ஞானக்கூத்தன் கவிதைகள்

வந்தனம் என்றான் ஒருவன்

வந்தனம் என்றான் ஒருவன்

இளங்காலைக் கதிரைக் கண்டு

நன்றென்றான் ஒருவன் இரவில்

முகிழ்கிற நிலவைக் கண்டு

அவன் நின்றான் கால்கள் ஊன்றி

ஒரு போதில் வருதல் மற்றப்

போதிலே மறைதல் என்னும்

இயல் பில்லா முகிலைப் பார்த்து.

Share with your friends !