ஞானக்கூத்தன் கவிதைகள்

ஞாதுரு

ஓவியம் வரைந்தேன் ஒன்று

அதிலொரு மனிதன் வந்தான்

அவன் முகம் மேசை மீது படிந்திட

இமைகளின் ரோமம் நீண்டு நெற்றிமேல் விரைக்கக்

கண்ணை

மூடினேன் வெறுப்புக் கொண்டு

அவன் என்னைக் கேட்டான். கண்களை

எதற்கிவ்வாறு

மூடினாய்? உன்னால் பார்க்க

முடிந்ததா? என்றேன் இப்போ நான் உன்னைப்

பார்த்துக் கொண்டு

அல்லவா இருந்தேன் என்றான்

மடிப்புகள் பலவாறாகப் பண்ணினேன் அவனைக்

கண்கள்

வெளிப்படக் கூர்மையாக்கிச்

சென்றுபார் மேலே என்றேன்

புலப்படாக் காக்கை தூக்கிச் செல்கின்ற கரண்டியைப்

போல்

ஏகினான் அவனும் ஆனால்

அழகென்று வானைக் கூறி.

Share with your friends !