ஞானக்கூத்தன் கவிதைகள்

மருதம்

ஊருக்கெல்லாம் கோடியிலே

முந்திரிக் கொல்லே

உக்காந்தால் ஆள்மறையும்

முந்திரிக் கொல்லே

செங்கமலம் குளிச்சுப்புட்டு

அங்கிருந்தாளாம்

ஈரச்சேலை கொம்பில் கட்டி

காத்திருந்தாளாம்

நாட்டாண்மைக்காரன் மகன்

அங்கே போனானாம்

வெக்கப்பட்டு செங்கமலம்

எந்திரிச்சாளாம்

நாட்டாண்மைக்காரன் மகன்

கிட்டே போனானாம்

வெக்கப்பட்டு செங்கமலம்

சிரிச்சிக்கிட்டாளாம்

உக்காந்தால் ஆள்மறையும்

முந்திரிக் கொல்லே

ஊருக்கெல்லாம் கோடியிலே

முந்திரிக் கொல்லே.

Share with your friends !