ஞானக்கூத்தன் கவிதைகள்

பவழமல்லி

கதை கேட்கப் போய் விடுவாள் அம்மா. மாடிக்

கொட்டகைக்குப் போய்விடுவார் அப்பா. சன்னத்

தாலாட்டின் முதல்வரிக்கே குழந்தைத் தம்பி

தூங்கிவிடும். சிறுபொழுது தாத்தாவுக்கு

விசிறியதும் அவரோடு வீடு தூங்கும்

பூக்களெல்லாம் மலர்ந் தோய்ந்த இரவில் மெல்ல

கட்டவிழும் கொல்லையிலே பவழ மல்லி

கதை முடிந்து தாய் திரும்பும் வேளை மட்டும்

தெருப்படியில் முழு நிலவில் அந்த நேரத்

தனிமையிலே என் நினைப்புத் தோன்றுமோடி?

Share with your friends !