ஞானக்கூத்தன் கவிதைகள்

கனவின் மனிதன்

ஒருவனைக் கனவில் கண்டேன்

உதடுகள் பற்கள் கண்கள்

தலைமயிர் நகங்கள் கை கால்

அனைத்துமே மனிதன் போல

இருந்திடும் அவனைக் கண்டேன்

கனவிலும் மனிதன் போலத்

தோன்றினால் மனிதன் தானா?

Share with your friends !