ஞானக்கூத்தன் கவிதைகள்

எழுதக் குவிந்த

எழுதக் குவிந்த கைபோல

இருக்கும் குன்றில் ஒருபாதை

மூட்டு தோறும் நீர்க் கசிவு

மணிக்கட்டோரம் விளை சகதி

சகதிப் பக்கம் ஒரு சப்தம்

உளியின் சப்தம் செவியில் விழும்

தாவும் அணிலின் முதுகின் மேல்

இராம பிரானின் கைவுரல்கள்

இடை வானத்தில் துணையாகும்

உளியின் சப்தம் மலை முழைஞ்சில்

உதிக்கும் போது ஓராண்டு

கேட்கும் போது நூறாண்டு

Share with your friends !