ஞானக்கூத்தன் கவிதைகள்

நாள்

கொட்டிக் கொண்டு போயேன்’டா

தட்டு கொண்டு வாயேன்’மா

தொட்டுக் கொள்ளப் போடேன்’மா

கட்டை விரலைத் தொட்டுக்கொள்

பள்ளிக்கூடம் போறேன்’மா

பாதை பார்த்துப் போய் வாடா

கையில் கட்டித் தருவாயா

கையைக் கனக்கும் வேணடாம்’டா

மத்தியானம் வருவேன்’மா

வெயிலில் வெந்து சாகாதே

மத்தியானம் வருவேன் நான்

பத்துப்பானை தேய்ப்பதற்கா?

Share with your friends !