ஞானக்கூத்தன் கவிதைகள்

தொழுநோயாளிகள்

ஐயா உம் விரல்கள் மூன்று

கிடந்தன. பெற்றுக் கொள்ளும்

அம்மணி உனதும் கூட

கால்களின் செதில்கள் அங்கே

கிடப்பதைக் கண்டேன். உங்கள்

உடம்பினை ஏனிவ்வாறு

உதிர்க்கிறீர் தெருவிலெங்கும்?

கங்கையில் விருப்பைக் கொஞ்சம்

கைவிடச் சொன்ன நூல்கள்

கேணியில் உடம்பைக் கொஞ்சம்

கைவிடச் சொன்னதுண்டா?

வெள்ளிக்கு முதல் நாள் ஊரை

வலம் வரும் தங்கட்கின்னும்

உடைமையில் கவனம் வேண்டும்

அம்மணி தங்கள் மேனி

சிந்தினால்

யாருக்காகும்?

Share with your friends !