ஞானக்கூத்தன் கவிதைகள்

கனவு

மலைகள் என்னும்

குறும்பற்கள்

முளைத்திராத

பூதலத்தின்

கொக்குப் போலக்

காலூன்றி

நிற்கும் மரங்கள்.

அதற்கப்பால்

எழுந்து வீழ்ந்து

தடுமாறும்

நடக்கத் தெரியாக் கடலலைகள்

யார் சென்றாலும்

விரல் நீட்டும்.

Share with your friends !