ஞானக்கூத்தன் கவிதைகள்

தலையணை

விழுவதால் சேதமில்லை

குலுக்கினால் குற்றமில்லை

மூலைகள் முட்களல்ல

உருவமோர் எளிமையாகும்

வாழ்க்கையில் மனிதன் கண்டு

பிடித்ததில் சிறந்ததாகும்

தலையணை. அதற்குள் ஒன்றும்

பொறி இயற் சிக்கல் இல்லை

பாயில்லை என்றால் வேண்டாம்

தலையணை ஒன்றைப் போடும்

Share with your friends !