ஞானக்கூத்தன் கவிதைகள்

கொள்ளிடத்து முதலைகள்

ஒன்றிரண்டு நான்கைந்து…

பத்துப் பத்தாய்…

ஒரு நூறா? ஆயிரமா?

கணக்கில் வாரா…

கொள்ளிடத்தின் மணல்வெளியில்

நடுச்சாமத்தில்

கரைமரங்கள் தூக்கத்தில்

ஆடும் போதில்

ஒன்றிரண்டு நான்கைந்து

பத்துப் பத்தாய்

ஒரு நூறா? ஆயிரமா?

கணக்கில் வாரா…

சிறிது பெரிதாய் முதலைக் கூட்டம்

சற்றும்

அமைதி கலையாமல் அவை

பேசிக் கொள்ளும்

சில நொடிக்குள் முடிவெடுத்துக்

கலையும் முன்னே

குறுங்காலால் மணலிலவை

எழுதிப் போட்ட

மருமமொழித் தீர்மானம்

என்ன கூறும்?

Share with your friends !