ஞானக்கூத்தன் கவிதைகள்

கீழ்வெண்மணி

மல்லாந்த மண்ணின் கர்ப்ப

வயிறெனத் தெரிந்த கீற்றுக்

குடிசைகள் சாம்பற் காடாய்ப்

போயின

புகையோடு விடிந்த போதில்

ஊர்க்காரர் திரண்டு வந்தார்

குருவிகள் இவைகள் என்றார்

குழந்தைகள் இவைகள் என்றார்

பெண்களோ இவைகள்? காலி

கன்றுகள் இவைகள் என்றார்

இரவிலே பொசுக்கப்பட்ட

அனைத்துக்கும் அஸ்தி கண்டார்

நாகரிகம் ஒன்று நீங்க

Share with your friends !