ஞானக்கூத்தன் கவிதைகள்

ஆவதும் என்னாலே

முதலிலிவர் போட்டியிட்டார் ஜாமீன்போச்சு

மறுபடியும் இவர் நின்றார் எவனெல்லாமோ

உதவுவதாய் வாக்களித்துக் கைவிரிச்சான்

கடைசிநாள் நான்போனேன் சுவரிலென்பேர்

கண்டதனால் முன்கூட்டி மக்கள் வெள்ளம்

கைதட்டல் நானெழுந்து பேசும் போது

ரெண்டுமணி. எதிரிகளைப் பிட்டுவைச்சேன்

பத்தாய்ரம் வாக்கதிகம். இவர் ஜெயித்தார்.

Share with your friends !