ஞானக்கூத்தன் கவிதைகள்

உறவு

ஈரக் கைகளைப் புடவையில் துடைத்தவா

றெதிர் வீட்டம்மாள் எட்டிப் பார்த்தாள்

அம்மா தபால்.

அஞ்சலட்டையை நொடியில் படித்ததும்

எரவாணத்தில் செருகிப் போனாள்

எரவாணத்தில் செருகிய கடிதம்

வருத்தப்பட்டு மூக்குக் கறுத்ததே.

Share with your friends !