ஞானக்கூத்தன் கவிதைகள்

தண்ணீர்த் தொட்டி மீன்கள்

இந்தக் கடலின்

எந்தக் குபேர மூலையிலும்

கிடைக்காத புழுக்கள்

வேளை தவறாமல்

தானாய் வருகிறது.

தெய்வக் கிருபையால்

புயல்களும் இல்லை.

திமிங்கிலங்களை

அவதாரக் கடவுள்

காணாமல் செய்துவிட்டார்.

ஆனால் இன்னும்

ஒன்று மட்டும்

புரியாத புதிராய் இருக்கிறது.

உலகத்தை உதடு குவியப் புணர்கையில்

அஃதென்ன இடையில்?

அப்புறம் ஒன்று

எங்கே எங்கள்

முள்ளுச் சூரியன்களும் கள்ளுப் பிறைகளும்?

Share with your friends !