ஞானக்கூத்தன் கவிதைகள்

கண்ணைக் கவரும் மார்பகங்கள்

பார்ப்பதரிதாய்ப் போய்விட்டதென்று

சுற்றிலும் பார்த்தேன்

உயர்ந்த வெள்ளைத் துணிக்குள்

இரண்டில் வலது பொதிந்திருந்தது

அதன் மேல் ஆனால் ஒரு ஈ

சாமரம் போல மார்பசைந்தது

அசையாதிருந்தது நான்

இடத்தை விட்டுப் போக நேர்ந்தது

போய் விட்டிருக்குமா ஈ

நிச்சயம் போய்விட்டிருக்கும்: இல்லை

நிச்சயம் இருக்கும்: ஈ போய்விட்டிருக்கும்

ஈ போய்விட்டிருக்கும் நிச்சயம் கூடப்

பார்க்கப் படாத ஈ யூகத்தளவு தான்

கண்ணால் எடுத்துச் செல்லப்பட்ட

கண்ணைக் கவர்ந்த மார்பகத்தின் மேல்

என்றும் இருக்கிறது ஈ.

Share with your friends !