பிரான்சிஸ் கிருபா கவிதைகள்

பார்வை

ஆளற்ற கூடம்.

அங்கே அந்த மர நாற்காலி அமர்ந்திருந்தது.

அதன் மேல்

வயலினை சாய்த்து வைத்துவிட்டு

வெளியேறியிருக்கிறான் இசைத் தொழிலாளி.

‘என்னிலும் நாலு தந்திகள் முறுக்கி

செல்லமாக தோளில் ஏந்தி வைத்து

ரம்பத்தால் வருடினால் என்ன’ 

என்பதுபோல் யாரையோ

பார்க்கிறது மர நாற்காலி.

எதிரே திறந்திருக்கிறது

இசைக் குறிப்பு புத்தகம்.

Share with your friends !