வருவாய், வருவாய் – கண்ணா – பாரதியார் கவிதைகள்


[பல்லவி]
வருவாய், வருவாய், வருவாய் – கண்ணா !
வருவாய், வருவாய், வருவாய் !

[சரணம்]
உருவாய் அறிவில் ஒளிர்வாய் – கண்ணா !
உயிரின் னமுதாய்ப் பொழிவாய் – கண்ணா !
கருவாய் என்னுள் வளர்வாய் கண்ணா !
கமலத்திருவோ டிணைவாய் – கண்ணா !

இணைவாய் எனதா வியிலே – கண்ணா !
இதயத் தினிலே யமர்வாய் – கண்ணா !
கணைவா யசுரர் தலைகள் – சிதறக்
கடையூ ழியிலே படையோ டெழுவாய் !

எழுவாய் கடல்மீ தினிலே – எழுமோர்
இரவிக் கினியா உளமீ தினிலே
தொழுவேன் சிவனாம் நினையே – கண்ணா !
துணையே, அமரர் தொழும்வா னவனே !

பாரதியார்


மேலும் பல பாரதியார் கவிதைகள் படிக்க Click Here

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *