மனத்திற்குக் கட்டளை – பாரதியார் கவிதைகள்


பேயா யுழலுஞ் சிறுமனமே! 

பேணா யென்சொல் இன் றுமுதல் 

நீயா ஒன்றும் நாடாதே 

நினது தலைவன் யானேகாண்; 

தாயாம் சக்தி தாளினிலும் 

தரும மெனயான் குறிப்பதிலும் 

ஓயா தேநின் றுழைத்திடு வாய் 

உரைத்தேன் அடங்கி உய்யுதியால்.

பாரதியார்


மேலும் பல பாரதியார் கவிதைகள் படிக்க Click Here

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *