பாரதியார் கவிதைகள் – பாரத நாடு

9. எங்கள்‌ தாய்‌

(காவடிச்‌ சிந்தில்‌ “ஆறுமுக வடிவேலவனே? என்ற மெட்டு)

தொன்று நிகழ்ந்த தனைத்தும்‌ உணர்ந்திடு

சூழ்கலை வாணர்களும்‌ – இவள்‌

என்று பிறந்தவள்‌ என்றுண ராத

இயல்பின ளாம்‌எங்கள்‌ தாய்‌. (1)

யாரும்‌ வகுத்தற்‌ கரிய பிராயத்த

ளாயினு மேயங்கள்‌ தாய்‌ -இந்தப்‌

பாருள்‌எந்‌ நாளுமோர்‌ கன்னிகை என்னப்‌

பயின்றிடு வாள்ளஎங்கள்‌ தாய்‌. (2)

முப்பதுகோடி முகமுடை யாள்‌உயிர்‌

மொய்ம்புற வொன்றுடை யாள்‌ – இவள்‌

செப்பு மொழிபதி னெட்டுடையாள்‌ எனிற்‌

சிந்தனை ஒன்றுடையாள்‌. (3)

நாவினில்‌ வேத முடையவள்‌ கையில்‌

நலந்திகழ்‌ வாளுடை யாள்‌ – தனை

மேவினர்க்‌ கின்னருள்‌ செய்பவள்‌ தீயரை

வீட்டிடு தோளுடை யாள்‌. (4)

அறுபது கோடி தடக்கைக ளாலும்‌

அறங்கள்‌ நடத்துவள்‌ தாய்‌ – தனைச்‌

செறுவது நாடி வருபவ ரைத்துகள்‌

செய்து கிடத்துவள்‌ தாய்‌. (5)

பூமி யினும்பொறை மிக்குடை யாள்பெரும்‌

புண்ணிய நெஞ்சினள்‌ தாய்‌ – எனில்‌

தோமிழைப்‌ பார்முன்‌ நின்றிடுங்‌ காற்கொடுந்‌

துர்க்கை யனையவள்‌ தாய்‌. (6)

கற்றைச்‌ சடைமதி வைத்த துறவியைக்‌

கைதொழு வாள்ளங்கள்‌ தாய்‌ -கையில்‌

ஒற்றைத்‌ திகிரிகொண்‌ டேழுல காளும்‌

ஒருவனை யுந்தொழு வாள்‌. (2)

யோகத்தி லேநிக ரற்றவள்‌ உண்மையும்‌

ஒன்றென நன்றறி வாள்‌ – உயர்‌

போகத்தி லேயும்‌ நிறைந்தவள்‌ எண்ணரும்‌

பொற்குவை தானுடை யாள்‌. (8)

நல்லறம்‌ நாடிய மன்னரை வாழ்த்தி

நயம்புரி வாள்எங்கள்‌ தாய்‌ – அவர்‌

அல்லவ ராயின்‌ அவரைவி முங்கிப்பின்‌

ஆனந்தக்‌ கூத்திடு வாள்‌. (9)

வெண்மை வளரிம யாசலன்‌ தந்த

விறன்மக ளாம்‌எங்கள்‌ தாய்‌ – அவன்‌

திண்மை மறையினும்‌ தான்மறை யாள்நித்தஞ்‌

சீருறு வாள்எங்கள்‌ தாய்‌. (10)

(இந்தியா, 1909 – ல்‌ ஜன்மபூமி)

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *