பாரதியார் கவிதைகள் – பாரத நாடு

4. பாரத நாடு

ராகம்‌ – இந்துஸ்தானி தோடி

பல்லவி

பாருக்குள்ளே நல்ல நாடு – எங்கள்‌

பாரத நாடு

சரணங்கள்‌

ஞானத்தி லேபர மோனத்திலே – உயர்‌

மானத்தி லேஅன்ன தானத்திலே

கானத்தி லேஅமு தாக நிறைந்த

கவிதையி லேஉயர்‌ நாடு – இந்தப்‌ (பாருக்குள்ளே)

தீரத்தி லேபடை வீரத்திலே – நெஞ்சில்‌

ஈரத்தி லேஉப காரத்திலே

சாரத்தி லேமிகு சாத்திரங்‌ கண்டு

தருவதி லேஉயர்‌ நாடு – இந்தப்‌ (பாருக்குள்ளே)

நன்மையி லேஉடல்‌ வன்மையிலே – செல்வப்‌

புகழினி லேஉயர்‌ நாடு – இந்தப்‌ (பாருக்குள்ளே)

ஆக்கத்தி லேதொழில்‌ ஊக்கத்திலே – புய

வீக்கத்தி லேஉயர்‌ நோக்கத்திலே

காக்கத்‌ திறல்கொண்ட மல்லர்தம்‌ சேனைக்‌

கடலினி லேஉயர்‌ நாடு – இந்தப்‌ (பாருக்குள்ளே)

வண்மையி லேஉளத்‌ திண்மையிலே – மனத்‌

தண்மையி லேமதி நுண்மையிலே

உண்மையி லேதவ றாத புலவர்‌

உணர்வினி லேஉயர்‌ நாடு – இந்தப்‌ (பாருக்குள்ளே)

யாகத்தி லேதவ வேகத்திலே – தனி

யோகத்தி லேபல போகத்திலே

ஆகத்தி லேதெய்வ பக்திகொண்‌ டார்தம்‌

அருளினி லேஉயர்‌ நாடு – இந்தப்‌ (பாருக்குள்ளே)

ஆற்றினி லேசுனை யூற்றினிலே – தென்றல்‌

காற்றினி லேமலைப்‌ பேற்றினிலே

ஏற்றினி லேபயன்‌ ஈந்திடுங்‌ காலி

இனத்தினி லேஉயர்‌ நாடு – இந்தப்‌ (பாருக்குள்ளே)

தோட்டத்தி லேமரக்‌ கூட்டத்திலே – கனி

ஈட்டத்தி லேபயிர்‌ ஊட்டத்திலே

தேட்டத்தி லேஅடங்‌ காத நதியின்‌

சிறப்பினி லேஉயர்‌ நாடு – இந்தப்‌ (பாருக்குள்ளே)

(1922 ஜனவரி – சுதேச கீதங்கள்‌ பாகம்‌ 1)

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *