பாரதியார் கவிதைகள் – பாரத நாடு

3. நாட்டு வணக்கம்‌

ராகம்‌ – காம்போதி தாளம்‌ – ஆதி

எந்தையும்‌ தாயும்‌ மகிழ்ந்து குலாவி

இருந்ததும்‌ இந்நாடே – அதன்‌

முந்தையர்‌ ஆயிரம்‌ ஆண்டுகள்‌ வாழ்ந்து

முடிந்ததும்‌ இந்நாடே – அவர்‌

சிந்தையில்‌ ஆயிரம்‌ எண்ணம்‌ வளர்ந்து

சிறந்ததும்‌ இந்நாடே – இதை

வந்தனை கூறி மனத்தில்‌ இருத்திஎன்‌

வாயுற வாழ்த்தேனோ?- இதை

“வந்தே மாதரம்‌, வந்தே மாதரம்‌”

என்று வணங்கேனோ? (1)

இன்னுயிர்‌ தந்தெமை ஈன்று வளர்த்து, அருள்‌

ஈந்ததும்‌ இந்நாடே – எங்கள்‌

அன்னையர்‌ தோன்றி மழலைகள்‌ கூறி

அறிந்ததும்‌ இந்நாடே – அவர்‌

கன்னிய ராகி நிலவினி லாடிக்‌

களித்ததும்‌ இந்நாடே – தங்கள்‌

பொன்னுடல்‌ இன்புற நீர்விளை யாடி, இல்‌

போந்ததும்‌ இந்நாடே – இதை

மங்கைய ராயவர்‌ இல்லறம்‌ நன்கு

வளர்த்ததும்‌ இந்நாடே – அவர்‌

தங்க மதலைகள்‌ ஈன்றமு தாட்டித்‌

தழுவிய திந்நாடே – மக்கள்‌

துங்கம்‌ உயர்ந்து வளர்கெனக்‌ கோயில்கள்‌

சூழ்ந்ததும்‌ இந்நாடே – பின்னர்‌

அங்கவர்‌ மாய அவருடற்‌ பூந்துகள்‌

ஆர்ந்ததும்‌ இந்நாடே – இதை

“வந்தே மாதரம்‌, வந்தே மாதரம்‌”

என்று வணங்கேனோ? (9)

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *