பாரதியார் கவிதைகள் – பாரத நாடு

10. வெறிகொண்ட தாய்‌

ராகம்‌ – ஆபோகி தாளம்‌ – ரூபகம்‌

1. பேயவள்‌ காண்‌்எங்கள்‌ அன்னை – பெரும்‌

பித்துடையாள்‌ எங்கள்‌ அன்னை

காயழல்‌ ஏந்திய பித்தன்‌ – தனைக்‌

காதலிப்பாள்‌ எங்கள்‌ அன்னை. (பேயவள்‌)

2. இன்னிசை யாம்‌இன்பக்‌ கடலில்‌ – எழுந்து

எற்றும்‌ அலைத்திரள்‌ வெள்ளம்‌

தன்னிடம்‌ மூழ்கித்‌ திளைப்பாள்‌ – அங்குத்‌

தாவிக்‌ குதிப்பாள்‌எம்‌ அன்னை (பேயவள்‌)

3. தீஞ்சொற்‌ கவிதையஞ்‌ சோலை – தனில்‌

தெய்வீக நன்மணம்‌ வீசும்‌

தேஞ்சொரி மாமலர்‌ சூடி – மதுத்‌

தேக்கி நடிப்பாள்‌எம்‌ அன்னை. (பேயவள்‌)

4. வேதங்கள்‌ பாடுவள்‌ காணீர்‌ – உண்மை

வேல்கையிற்‌ பற்றிக்‌ குதிப்பாள்‌

ஓதருஞ்‌ சாத்திரம்‌ கோடி – உணர்ந்‌

தோதி யுலகெங்கும்‌ விதைப்பாள்‌ (பேயவள்‌)

5. பாரதப்‌ போரெனில்‌ எளிதோ? – விறற்‌

பார்த்தன்கை வில்லிடை ஒளிர்வாள்‌

மாரதர்‌ கோடிவந்‌ தாலும்‌ – கணம்‌

மாய்த்துக்‌ குருதியில்‌ திளைப்பாள்‌ (பேயவள்‌)

(1909-ல்‌ இந்தியா)

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *