சசிகலா ஜெயிலுக்கு போயாச்சு ….நிம்மதியடைய போகிறீர்களா ?

தமிழகத்தில் இருக்க கூடிய இரண்டு கட்சிகளுமே ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை …

உச்சநீதிமன்ற நீதிபதிகளின் தீர்ப்பில் மிக தெளிவாக ஒரு கருத்து சொல்லப்பட்டிருந்தது …

இந்த சமூகத்தை அச்சுறுத்தும் ஊழலை நாம் ஏற்றுக்கொள்ளவே , சகித்துக்கொள்ளவே பழகிவிட்டோம் என்பதே

நன்றாக சிந்தித்து பாருங்கள் இப்போது அனைவரும் சொத்துகுவிப்பு வழக்கில் தண்டணை அளித்த போது ஆனந்தம் அடைகின்றோம் . இதுதான் உண்மையான தீர்ப்பு என்பது குமாரசாமி அவர்கள் தவறான தீர்ப்பினை அளித்த போதே நம் மனதில் இருந்துகொண்டுதான் இருந்தது .

அப்படி இருக்கையில் எப்படி அதிமுக வை ஆட்சி அமைக்கும் அளவுக்கு தேர்ந்தெடுத்தோம் ….ஏன் நமக்கு இந்த ஊழல் ஓட்டளிக்கும்போது பெரிதாக படவில்லை …காரணம் எளிது , மக்கள் அனைவரும் அரசியல்வாதின்னா  ஊழல் செய்யாமலா இருப்பான் இதெல்லாம் சாதாரணம் என்கிற மனநிலைக்கு வந்துவிட்டார்கள் …

இந்த மனநிலையே மக்களிடத்தில் அரசியல்வாதிகளுக்கு இருந்த பயத்தினை மறைத்துவிட்டது ..

விளைவு இப்போது ஊழல்வாதிகள் சமூகத்தில் பெரும்பான்மையாகவும் நல்லவர்கள் சிறும்பான்மையினராகவும் இருக்கின்றனர் …இது சமூகத்திற்கு நல்லதல்ல ….

விழித்துக்கொள்ளவேண்டும் மக்களே !

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *