
புத்தகம் : மௌன வலிகளின் வாக்குமூலம்
பதிப்பகம் : நக்கீரன்
பதிப்பு : இரண்டாம் பதிப்பு
ஆண்டு : ஏப்ரல் 2018
எழுதியவர் : ஜெயப்பிரசாந்தி ஜெயபாலசேகரம்
முதல் பதிப்பு : இலங்கை சமூக சிற்பிகள்
இலங்கையின் போர் நடைபெற்ற காலங்களில் யாழ்ப்பாணம், அனுதாபுரம் , கிளிநொச்சி அம்பாரை மாவட்டங்களில் பிறந்து வளர்ந்த போரிலே பல துன்பங்களை அனுபவித்த இளைஞர்கள் அவர்களே தொகுத்து எழுதிய 12 கதைகள் (உண்மை) தொகுப்பு “மௌன வலிகளின் வாக்குமூலம்” .
[embedyt] https://www.youtube.com/watch?v=HGz4O1uglCM[/embedyt]
இலங்கையில் சமூக சிற்பிகள் என்கிற அமைப்பு சிங்களம் மற்றும் தமிழில் வெளியிட்ட இந்த பதிப்பினை தமிழகத்தில் நக்கீரன் மறு பதிப்பாக வெளியிடுகிறது.
ஜெயப்பிரசாந்தி ஜெயபாலசேகரம் இந்த நூல் குறித்து பேசும்போது,
அலை வந்து தாலாட்டும் சிறு தீவாம் இலங்கை திருநாட்டில் தமிழராய் பிறந்த ஒரே காரணத்திற்காக அகதிகளாய் ஆக்கப்பட்டு அபலப்படுத்தப்பட்ட அபலைகளுள் நானும் ஒருத்தி என்ற வகையினிலே என்னுள்ளும் பல மௌன வலிகள் ஏராளம் நிறைந்துள்ளது என தொடங்கி….
யுத்தம் நடந்த வேளைகளில் இடம் மாறி இடம் மாறி அலைந்து திருந்த போதும் புத்தகங்களை சுமந்து எனக்கு படிக்க உதவிய தன் பெற்றோர் மற்றும் சகோதரர்களுக்கு நன்றி, அந்த அர்பணிப்பினால் தான் என்னால் தற்போது பேச முடிகிறது, என்னுடைய துயரங்களை எழுத்து வடிவடிவில் பதிக்க முடிந்தது என்றார்.
இந்த புத்தகத்தில் போர் மேகம் சூழ்ந்த கறுப்பு நாட்களில் நம் மக்கள் அனுபவித்த நம் மக்கள் அனுபவித்த இன்னல்கள் , நம் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகளை சுட்டிக்காட்டிடவே விரும்புகிறேன் என்றார்.
மேலும் அவர் பேசும் போது, நாம் அனைவரும் நினைத்து கொண்டிருப்பதை போல இலங்கை ராணுவம் மட்டுமே அநீதியை செய்திடவில்லை . காக்க வந்த கடவுள் என என் மக்கள் கும்பிட்ட இந்திய ராணுவத்தினரும் எம் மக்களை அழித்தொழித்தனர் என்பதே உண்மை ஆகும் என்றார்.
கையெடுத்து கும்பிட்ட என் மக்களின் கரங்களுக்குள் குண்டுகளை வைத்தனர். மீளமுடியாத அளவில் கைகளிலும் கால்களிலும் கைவிளங்குகளை இட்டனர். கண் போல போற்றிய என் பெண்களின் கற்புகளை சூறையாடினர். இலங்கை படையோடு சேர்ந்துகொண்டு அமைதிப்படை என்கிற பெயரிலே இந்தியப்படையும் அழித்தொழித்தது.
மார நிழலிலே உண்டு உறங்கி
கட்டாந்தரையே பஞ்சனையாய்
பதுங்கு குழியே தாய்மடியாய்
என இலங்கை மண்ணில் மக்கள் அடைந்த அவலங்களை எடுத்துரைத்தார்.
இந்த புத்தகம் படிப்பதனால் என்ன அறியலாம் :
ஒரு போர் என்றால் எப்படி இருக்கும், தனது அரசே கருணை இல்லாமல் தாக்கினால் அப்பாவி மக்கள் அடையும் துயரங்கள் எப்படி இருக்கும், அமைதிப்படை என்கிற பெயரிலே இந்தியப்படை செய்த கொடுமைகள் என்ன என அனைத்தையும் அந்த சூழலுக்குள் சிக்கி கிடந்தவர்களின் ரத்தம் தோய்ந்த எழுத்துக்களில் நீங்கள் அறிய முடியும்.
