Site icon பாமரன் கருத்து

வெ.இறையண்பு ஐஏஎஸ் எழுதிய சிறந்த 10 புத்தகங்கள்

இறையண்பு ஐஏஎஸ் எழுதிய சிறந்த 10 புத்தகங்கள் ஒவ்வொன்றையும் தவறாமல் படித்திடுங்கள்

நாம் ஒவ்வொருவரும் தவறாமல் படிக்க வேண்டிய சில முக்கியமான புத்தகங்களைத்தான் இங்கே குறிப்பிட்டு இருக்கிறேன். இறையண்பு ஐஏஎஸ் [Best Books Of iraianbu] எழுதிய சிறந்த 10 புத்தகங்கள் ஒவ்வொன்றையும் தவறாமல் படித்திடுங்கள்.


தமிழகம் நன்கறிந்த IAS அதிகாரிகளில் ஒருவர் இறையண்பு ஐஏஎஸ் [V. Iraianbu IAS] . அதுமட்டுமல்லாமல், எதிர்கால இளைய தலைமுறைகளுக்கு தேவையான கருத்துக்களை பேசுவதையும் எழுதுவதையும் வாடிக்கையாக வைத்துள்ளார். பல்வேறு தலைப்புகளில் இறையண்பு ஐஏஎஸ் பல புத்தகங்களை எழுதி இருக்கிறார். அவை அனைத்துமே படிக்க உகந்தவை என்றாலும் கூட நாம் ஒவ்வொருவரும் தவறாமல் படிக்க வேண்டிய சில முக்கியமான புத்தகங்களைத்தான் இங்கே குறிப்பிட்டு இருக்கிறேன். இறையண்பு ஐஏஎஸ் எழுதிய சிறந்த 10 புத்தகங்கள் ஒவ்வொன்றையும் தவறாமல் படித்திடுங்கள். 

1. ஏழாவது அறிவு [Ezhavathu Arivu]

இறையண்பு அவர்களால் எழுதப்பட்ட ஏழாவது அறிவு என்ற புத்தகம் மொத்தம் மூன்று பாகங்களாக வெளிவந்துள்ளது. மூன்று பாகங்களும் இணைந்தும் நீங்கள் வாங்கி படிக்கலாம்.

புத்தகம் பெயர் : ஏழாவது அறிவு [Ezhavathu Arivu]

விலை : ரூ 520

எழுதியவர் : வெ.இறையண்பு

புத்தகம் பற்றி : அனைவருக்கும் ஏற்படக்கூடிய வாழ்க்கை அனுபவங்கள் அனைத்தும் ஐம்புலன்களால் பதிவு செய்யப்பட்டு ஆறாம் அறிவால் பகுத்து அறியப்பட்டு, மனதால் இயக்கப்படுகிறது. அதன் பின்னணியில் அன்றாட வாழ்வு நகர்கிறது. ஒரு சில சமயங்களில் நாம் மனதில் நினைத்துக்கொண்டிருந்த நபர் நேரில் வருவது அல்லது போனில் அழைப்பது போன்ற சம்பவங்கள் நடக்கின்றன. மேலும், சாப்பிடும்போது புரை ஏறிவிட்டால், யாரோ நினைக்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது. விடியற்காலை கனவு மூலம் பலரும் எதிர்காலம் பற்றி உணர்வதும் அன்றாட நிகழ்வாக உள்ளது. அனைவரது மனதிற்குள்ளும் பொதுவாக இருக்கும் இது போன்ற முன்னறியும் திறனுக்கு ஏழாம் அறிவு காரணமா? என்ற கேள்வி பலருக்கும் இருந்து வருகிறது. ஏழாவது அறிவு என்று பொதுவாக சொல்லப்படும் அதீத உள்ளுணர்வு சக்தியானது இ.எஸ்.பி. (எக்ஸ்ட்ரா சென்சரி பெர்செப்ஷன்) என்று ஆங்கிலத்தில் குறிப்பிடப்படுகிறது. அந்த வகையில் உலகம் முழுவதுமே அத்தகைய சக்தி பெற்ற மனிதர்களின் அசாதாரணமான அனுபவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இ.எஸ்.பி. என்பது எதிர்காலத்தில் நடைபெற இருக்கும் விஷயங்களை அல்லது கடந்த காலத்தில் நடந்து முடிந்த விஷயங்களை ஒருவரது மனதால் உணர முடிகின்ற அல்லது அதை காட்சிப்படுத்துகின்ற ஆற்றல் என்று குறிப்பிடப்படுகிறது. இதுபோன்று பல்வேறு விசயங்கள் இந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.

Download/Buy Here

2. ஐஏஎஸ் தேர்வும் அணுகுமுறையும்

ஐஏஎஸ் என்பது ஒவ்வொரு மாணவரின் கனவு படிப்பு, பெற்றோர்கள் ஒவ்வொருவரும் தங்களது பிள்ளைகள் படிக்க வேண்டும் என நினைக்கும் படிப்பு. ஆனால் ஐஏஎஸ் படிப்பு என்றால் என்ன? ஐஏஎஸ் க்கு எப்படி படிக்க வேண்டும்? ஐஏஎஸ் தேர்வு எப்படி நடக்கும்? என்பது போன்ற கேள்விகளுக்கு பதில் என்பது அவ்வளவு எளிதில் கிடைக்காது. ஆகவே அவர்கள் ஐஏஎஸ் படிப்பை நோக்கி அவர்கள் நகர்வது என்பது கனவாகிப்போகும். இறையண்பு அவர்கள் இதற்காகவே ஒரு புத்தகத்தை எழுதி இருக்கிறார்.

புத்தகம் பெயர் : ஐஏஎஸ் தேர்வும் அணுகுமுறையும் [IAS Thervum Anugumuraiyum Paperback]

விலை : ரூ 175

எழுதியவர் : வெ.இறையண்பு

கடந்த காலங்களில் ஐ.ஏ.எஸ் படிப்பு என்பது எல்லோராலும் அடைய முடிகிற ஒன்றல்ல; நமக்கெல்லாம் அந்த வாய்ப்பு கிட்டாது என பரப்பப்பட்ட புரளிகளுக்கு முடிவுகட்டும் நோக்கில் எழுதப்பட்டடுள்ள அரிய புத்தகம். சரளமான ஆங்கில புலமை, தேர்ந்த அறிவு, ஆழிந்து படிக்கும் புலமை உள்ளவர்கள்தான் ஐ.ஏ.எஸ் ஆகமுடியும் என்றிருந்த நிலையிருந்து தமிழ் வழிக் கல்வியாளர்கள்ளும் ஐ.ஏ.எஸ் எழுதலாம் என்பதை ஆணித்தரமாக உணர்த்துகிறது இந்த புத்தகம். அதற்கான எளியமுறைப் பயிற்ச்சிகளும் கூறப்பட்டுள்ளது. தீவிர முயற்சியும் அதற்கான பயிற்சியும் இருந்தால் ஐ.ஏ.எஸ் பதவி என்ன? அதற்கும் மேலான் சிகரத்தையும் அடையலாம் என்பதை எளிய நடையில் தெளிவாக விளக்குகிறது இந்நூல்.

Download/Buy Here

3. போர்த் தொழில் பழகு

விலை : ரூ 250

“போர்த் தொழில் பழகு” வெ. இறையன்பு அவர்களின் அற்புதமான, அனைவராலும் கொண்டாடப் பட வேண்டிய வியத்தகு படைப்பு. நாற்பது வாரங்கள் போரையும், வெற்றிவாகை சூடிய மன்னர்கள் கடைப்பித்த போர் நுணுக்கங்களையும், அவற்றை இன்றைய போட்டியும் சூழ்ச்சியும் நிறைந்த வாழ்வுடன் தொடர்புபடுத்தி புதிய தலைமுறையில் எழுதி வந்தார். இளைஞர்களுக்கு சக்தியூடிக் கொண்டிருந்த தொடர் இப்போது நூலாக கோர்க்கப்பட்டு புதிய தலைமுறை வெளியிட்டு உள்ளது. சமூகத்தை நாம் எவர் துணையும் இன்றி நேரடியாக எதிர் கொள்ளும் வரை POLITICS என்ற விஷயம், அரசியல் சம்மந்தப்பட்ட ஒன்று என்று நாம் நினைத்தது அனைத்தும் தவிடு பொடியாகின. இன்றைய CORPORATE யுகம் நம்மை அறியாமலே நம்மை அதில் தள்ளி விட்டு வேடிக்கை பார்க்கிறது .

அதைக் கையாளத் தேவையான தெளிந்த அறிவு நம்மிடையே இல்லாத காரணத்தினால் அதை எதிர் கொள்ள முடியாமல் நிலைகுலைந்து விடுகிறோம். அன்றைய மன்னர்கள் கையாண்ட போர் முறைகள் அனைத்தும் அறிவு என்னும் ஆயுதத்தைக் கொண்டே நடத்தப்பட்டுள்ளன. அவற்றை இறையன்பு அவர்கள் பல உண்மை நிகழ்வுகளுடன் சுவையான சரித்திரக் குறிப்புகளுடன் பதுங்கிப் பாய், வலையை விரி, கவனத்தை திசை திருப்பு, பலவீனத்தைப் பந்தாடு, எதிரியாய் மாறு, முதலில் முஷ்டியை உயர்த்து, சாமுராய் யாய் இரு, புயலெனப் புறப்படு, எதிரியை களைப்படைய செய்… இது போன்று மொத்தம் இருபத்தி மூன்று போர் உத்திகளை விளக்கி அதை எப்படி, எப்பொழுது, யாருக்கெதிராய் பயன்படுத்த வேண்டும் என்பதையும் தெளிவாக விளக்கியுள்ளார். இன்றைய சூழலில் அனைவரும் அவசியம் படித்துத் தெரிந்து கொள்ளவேண்டிய நல்லதொரு புத்தகம்.

Download/Buy Here

4. உன்னை அறிந்தால்

வாசிப்பவரை ஒரு படி மேலே அழைத்துச் செல்வது தான் நல்ல புத்தகம். இறையண்பு அவர்கள் எழுதியிருக்கும் புத்தகங்கள் அனைத்துமே அப்படிப்பட்டவை தான். அதில் மாற்றுக்கருத்து இல்லை. உலகத்தை அறிந்துகொள்வதற்கு முன்பாக ஒருவர் ஏன் அவரைப்பற்றி அறிந்துகொள்ள வேண்டும்? அப்படி ஒருவர் அவரையே அறிந்துகொண்டால் அதனால் என்ன மாற்றங்கள் நடைபெறும்? இதுபோன்ற, வாழ்க்கைக்கு தேவையான செறிவான கருத்துக்களை எளிய தமிழ் நடையில் கொடுத்திருக்கிறார்.

விலை : ரூ 180

Download/Buy Here

5. சிம்மாசன சீக்ரெட் [SIMMASANA SECRET]

சிம்மாசனத்திற்கு இரகசிய குறுக்குவழி ஒன்றுமில்லை; மிக வெளிப்படையான வழி ஒன்றே இருக்கிறது. அது எல்லோருக்கும் நன்மையளிக்கும் செயல்களில் நேர்மையுடன் ஈடுபடுவதே. அவ்வாறு நற்செயல்களில் ஈடுபட்டு உழைப்பவர்களின் காலடிகளில் சிம்மாசனங்கள் வந்து சரணடையும். வரலாறு இதையே நமக்குப் போதிக்கிறது. சிம்மாசனங்களை அடைவதைக் காட்டிலும் அவற்றைத் தக்க வைப்பதே சிரமம். அடைவதற்கும், தக்க வைத்துக் கொள்ளுவதற்கும் வரலாறு வழங்கும் பாடங்களை வசியம் நிறைந்த மொழியில், தனக்கே உரிய நடையில் நம் உள்ளத்துள் நிறைக்கிறார் வெ.இறையன்பு.

Download/Buy Here

6. வையத் தலைமை கொள்

துடிப்பாகவும் முனைப்பாகவும் செயல்பட்டு அனைத்து சாதக பாதக அம்சங்களையும் அலசி ஆராய்ந்து துல்லியமாக கணித்து தீர்க்கமாக முடிவெடுப்பவர்களுக்கே இந்த வையம் மகுடம் சூட்டி அழகு பார்க்கும். அடுத்தவர்களுக்காக உழைத்தால் அது சேவகம்; நம் உள்ளுணர்வுக்காகப் பணியாற்றினால் மட்டுமே அது உழைப்பு. நமக்காக உழைக்கிறோம் என்று ஈடுபாட்டுடன் செயலாற்றுபவர்களே தலைமைப் பொறுப்பை அலங்கரிக்கமுடியும் என்ற சூழல் யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு இன்றைய இளைஞர்கள் தங்களை ஆயத்தப்படுத்திக் கொள்ளும் வழிமுறைகளைச் செப்பனிட்டுத் தருகிறது இந்நூல்.

விலை : ரூ 427

Download/Buy Here

7. வாழ்க்கையே ஒரு வழிபாடு

இந்திய ஆட்சிப் பணியில் உயர் அதிகாரியாகப் பணிபுரியும் வெ.இறையன்பு, இன்றைய இளைஞர்களின் நலனிலும் நாளைய இந்தியாவின் வளத்திலும் அதிக அக்கறை உள்ளவர். எழுத்தை ஆளும் திறமை படைத்த இவர், தனது படைப்பாற்றலையும் சமூக நலனுக்கே அர்ப்பணிக்கும் இயல்புடையவர் என்பதை இந்த நூலின் மூலம் தெரிந்து கொள்கிறோம். தனி மனிதன் உடல் சார்ந்த ஒழுக்கமும் மனம் சார்ந்த தூய்மையும் கொண்டு அறிவின் ஆற்றலைத் துணையாக ஏற்று வாழ வேண்டும் என்பதை, இந்த நூலில் உள்ள 25 கட்டுரைகள் வாயிலாக நமக்கு உணர்த்துகிறார். ஆன்மிகம் என்பது அன்றாட வாழ்க்கையுடன் இரண்டறப் பின்னிப் பிணைந்துள்ளது என்பதை கடவுள் மறுப்பாளர்களுக்கும், கடி தோச்சி மெல்ல உணர்த்துகிறார். ஆன்மிகத்தை விளக்கிக் கூறுகையில், நகைச்சுவையும் சரியான விகிதத்தில் கலந்து கூற வேண்டும் என்பதை நூலாசிரியர் நன்கு உணர்ந்து இந்தக் கட்டுரைகளை வடிவமைத்திருக்கிறார். நகைச்சுவை சற்று தூக்கலாக இருந்து விட்டால், சொல்ல முற்படும் ஆன்மிக கருத்துக்கள் நீர்த்துப் போய் விடக்கூடும் என்பதைப் புரிந்து கொண்டு எழுதியுள்ள இந்தக் கட்டுரைகளைப் படிக்கும்போது வழிபாட்டின் அருமையை வாழ்க்கையின் பெருமையை நாம் உணர்ந்து மகிழ்கிறோம்.

விலை : ரூ 150

Download/Buy Here

8. உள்ளொளிப் பயணம்

உள்ளொளிதான் ; ஆனால் அதன் பயணம் எல்லை இல்லாதது. ஒரே பரிமாணம் கொண்ட காலத்திற்கும் புத்தரிமாணம் கொண்ட தளத்திற்கும் எல்லை இர்ரை என்பதால் உள்ளொளிக்கும் எல்லை இல்லை. கதைகள் சமுதாய நோக்கமற்றதாக இருப்பின் வெறும் உணர்ச்சிகளை மட்டும் கொட்டி நீர்த்துப் போகிறது. இந்தக் குறை நிகழ்ந்துவிடக்கூடாது என்பதில் எச்சரிக்கை உணர்வுடன் கவிதை நம்மை அழைத்துச் செல்கிறது.

விலை : ரூ 215

Download/Buy Here

9. அரிதாரம்

ஒரு கவிஞன் கதை எழுதினால் அவன் சமைக்கும் படைப்பின் ருசி எப்படி தனிசுவையைத் தோற்றுவிக்கும் என்பதற்கு இந்நூல் ஒரு சான்று. பத்தொன்பது சிறுகதைகளும் ரகசியமாய் வந்து மனதில் இடம்பிடித்து, மொத்தமாய் சிறப்புத்தன்மை பெற்றாலும்; ஒரு சில கதைகளை இங்கே சுட்டிக்காட்டாமல் இருக்க முடியவில்லை. ‘ தலைமாணாக்கள்’ ஒரு குருவிற்கும், சிஷ்யனுக்கும் உள்ள பற்று என்ன என்பதை சிஷ்யன் தன் கை கட்டை விரலை குருவிற்கு காணிக்கையாய் அளிக்கும் விசித்திரம், உலகிற்கு கூறும் நற்சிந்தனையாகவே படுகிறது. ‘மாயைகள்ய ரயில் வண்டியில் செல்லும்போது ஏற்படும் அனுபவங்கள், கண்முன் நேரடிக் காட்சிகளாகவே பதிவாகி விரிகிறது.

விலை : ரூ 100

Download/Buy Here

10. படிப்பது சுகமே!

படிப்பது பாரம் என்பதை மாணவர்கள் நினைத்து அச்சமடையாமல் படிப்பது ‘சுகம்’ தரும் ஒன்றாகும் என்பதை விளக்கமாகவும் சுவையாகவும் கூறியுள்ளார். பரீட்சை எழுதவுள்ள மாணவர்கள் தங்களை எப்படித் தயார் செய்துகொள்ள வேண்டும், பாடங்கள் எப்படி உள்வாங்கிக் கொள்ள வேண்டும் எனப் பல விஷயங்களைப் பற்றியும் மாணவர்களுக்கு இந்நூல் விளக்கித் தருகிறது.

மாணவர்களின் படிப்புக்கும் தேர்வுக்கும் இந்நூல் ஒரு சிறந்த திறவுகோலாக இருக்கும். இந்நூல் ஊன்றிப் படிப்பவர்கள் தேர்வில் வெற்றிபெற்று சாதனைகளை நிகழ்த்துவார்கள் என்பது உறுதி.

விலை : ரூ80

Download/Buy Here

Share with your friends !
Exit mobile version