Site icon பாமரன் கருத்து

குறள் 4: வேண்டுதல்வேண் டாமை இலானடி

அதிகாரம் : கடவுள் வாழ்த்து

குறள் 4

வேண்டுதல்வேண் டாமை இலானடி சேர்ந்தார்க்கு

யாண்டும் இடும்பை இல

திருக்குறளின் விளக்கவுரை
மு.வ உரை

விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர்க்கு எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை

கலைஞர் உரை

விருப்பு வெறுப்பற்றுத் தன்னலமின்றித் திகழ்கின்றவரைப் பின்பற்றி நடப்பவர்களுக்கு எப்போதுமே துன்பம் ஏற்படுவதில்லை

சாலமன் பாப்பையா உரை

எதிலும் விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை மனத்தால் எப்போதும் நினைப்பவருக்கு உலகத் துன்பம் ஒருபோதும் இல்லை


முந்தைய குறள்


அடுத்த குறள்

Exit mobile version