Site icon பாமரன் கருத்து

குறள் 2: கற்றதனால் ஆய பயனென்கொல்

அதிகாரம் : கடவுள் வாழ்த்து

குறள் 2

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்

திருக்குறளின் விளக்கவுரை
மு.வ உரை

தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளை தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன?

கலைஞர் உரை

தன்னைவிட அறிவில் மூத்த பெருந்தகையாளரின் முன்னே வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான் ஒருவர் கற்றிருந்தாலும் அதனால் என்ன பயன்? ஒன்றுமில்லை 

சாலமன் பாப்பையா உரை

தூய அறிவு வடிவானவனின் திருவடிகளை வணங்காதவர், படித்ததனால் பெற்ற பயன்தான் என்ன?


முந்தைய குறள்


அடுத்த குறள்

Exit mobile version