Site icon பாமரன் கருத்து

Procedure for free education on tamilnadu matruculation school | கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் -தனியார் பள்ளிகளில் இலவச இடஒதுக்கீடு பெற ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

பள்ளிக்கல்வி -குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் 2009 -ன் கீழ் பிரிவு 12 (1) (C) மற்றும் பிரிவு 13.(1) ஐ மத்திய அரசின் வழி காட்டு நெறிமுறைகளின் படியும் பள்ளிக்கல்வித் (சி2) துறை 18.012011 நாளிட்ட அரசாணை (நிலை) எண் :9 ன் படியும் இலவச கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் அதற்கு வழி வகை செய்கிறது.

 

இந்த சட்டம் ஆறு வயது முதல் 14 வயதுக்கு கீழ் உள்ள அனைத்து குழந்தைகளும் இலவச கல்வி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் கொண்டு வரப்பட்டது.இந்த சட்டம் தனியார் பள்ளிகளில் ஏழை எளிய மக்களின் குழந்தைகள் இலவசமாக கல்வி பயில வழிவகை செய்கிறது.

 

 

கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் தேவையான ஆவணங்கள் :

 

பிறப்பு சான்று
இருப்பிட சான்று
வருமான சான்று
சாதி சான்று

 

கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் யாருடைய குழந்தைகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தலாம் :

 

தாழ்த்தப்பட்டவர்கள்
வறுமை கோட்டிற்கு கீழ் இருப்பவர்கள்
மலை சாதியினர்
பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள்
ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்கும் குறைவான பிற வகுப்பினர்
மாற்றுத்திறனாளிகள்
திருநங்கைகள்

 


கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் 25% இடஒதுக்கீடு எப்படி விண்ணப்பிப்பது  ?

 

நேரடியாகவோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
 
இந்த இணையதளத்திற்குள் செல்லுங்கள், 

http://www.dge.tn.gov.in

 


புகைப்படத்தில் காட்டப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்

கிளிக் செய்தவுடன் இந்த பக்கத்திற்கு வரும் .
http://tnmatricschools.com/rte/rtehome.aspx

இதில் இரண்டு ஆப்சன்கள் இருக்கும் .



Download / பதிவிறக்கம்

Application / விண்ணப்பம்

 

நேரடியாக விண்ணப்பிக்கும் முறை :

 

Download / பதிவிறக்கம் – இந்த ஆப்சனை கிளிக் செய்து விண்ணப்ப படிவத்தை தரவிறக்கி (download) அதனை பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட பள்ளியில் கொடுக்க வேண்டும் அல்லது மாவட்ட கல்வி அலுவலங்களில் விண்ணப்ப படிவத்தை கொடுக்கலாம்.

Download form here : https://drive.google.com/file/d/16kUqfKXujSzdmzlv4jnNiJRfmRBGpAsF/view?usp=drivesdk

 

ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கும் முறை :

ஆன்லைன் மூலமாக விண்ணப்பம் செய்ய விரும்பினால் “Application / விண்ணப்பம்” இந்த ஆப்சனை கிளிக் செய்யுங்கள் (மார்ச் 29,2018 அன்று இந்த லிங்க் வேலை செய்யவில்லை, விரைவில் சரி செய்யப்படலாம்)

இருந்தாலும் எப்படி செய்யவேண்டும் என்கிற விளக்கத்தை தருகிறோம்.

ஆன்லைன் முறையில் விண்ணப்பம் செய்ய நீங்கள் விரும்பினால் பின்வரும் ஆவணங்களை ஸ்கேன் செய்து வைத்துக்கொள்ளுங்கள், ஒவ்வொரு பைலின் Size 400 KB க்கு கீழே இருக்க வேண்டும்.

> குழந்தையின் புகைப்படம்
> பிறப்பு சான்றிதழ்
> இருப்பிட/முகவரி சான்றிதழ்
> வருமான சான்றிதழ்

இவை அனைத்தையும் தயாராக வைத்துக்கொண்டு உங்களது மொபைல் மூலமாகவோ அல்லது அருகில் இருக்க கூடிய இ சேவை மையத்திற்கு சென்றோ அல்லது நெட் சென்டர்களிலோ விண்ணப்பிக்கலாம்.

புகைப்படத்தில் காட்டப்பட்டுள்ள ஒவ்வொரு கேள்விக்கும் பதிலை கொடுத்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்திடுங்கள்.


எந்த பள்ளியில் எவ்வளவு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பதை அறிவது எப்படி?



இந்த லிங்கை கிளிக் செய்தால் மாவட்ட வாரியாக Nursery & Primary Schools, Matriculation Schools தகவல்கள் கொடுக்கப்பட்டு இருக்கும். அதனை டவுன்லோடு செய்து பார்த்தால் எந்த பள்ளியில் எவ்வளவு இடம் இலவச கோட்டாவிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என தெரிய வரும்.

http://tnmatricschools.com/rte/rtepdf.aspx#


தேர்தெடுக்கும் முறை என்ன ?



ஒவ்வொரு பள்ளியும் அனைத்து விண்ணப்பங்களையும் மறுக்காமல் ஏற்க வேண்டும். ஒதுக்கப்பட்ட அளவிற்கு அதிகமாக விண்ணப்பங்கள் வந்தால் குழுக்கல் முறையில் மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு இடத்தினை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

பள்ளியில் விண்ணப்பத்தினை வாங்க மறுத்தாலோ இடம் முடிந்துவிட்டது என பொய்யாக கூறினாலோ உடனடியாக மாவட்ட கல்வி அலுவலரை சந்தித்து புகார் கூறுங்கள்.



கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் 2009 திட்டம் தொடர்பான சில முக்கிய குறிப்புகள் :


> இதற்காக நீங்கள் எந்த கட்டணமும் செலுத்திட வேண்டியது இல்லை, உங்கள் குழந்தைக்கான கல்விக்கட்டணம் அனைத்தையும் அரசு கட்டும்.  

> இது அந்த பள்ளி வழங்குகின்ற இலவச கல்வி அல்ல. நமது வரி பணம் அந்த பள்ளிகளுக்கு கட்டணமாக வழங்கப்படுகிறது. ஆகவே தயக்கம் என்பது வேண்டாம். 

> சில பள்ளிகள் அரசு கட்டணம் செலுத்திய பிறகு தருகிறோம் என கட்டணம் கேட்டால் கொடுக்கவேண்டாம். 

> புகார் ஏதேனும் இருந்தால் மாவட்ட தொடக்கப் பள்ளி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர், மெட்ரிக்பள்ளி ஆய்வாளர், மெட்ரிக்பள்ளி இயக்குநர் அவர்களிடம் முறையிடுங்கள்.  

> இந்த திட்டத்தில் LKG அல்லது முதல் வகுப்பில் மட்டுமே மாணவர்களை சேர்க்க முடியும். இடையே கொண்டு சேர்த்தால் அரசின் பலன் கிடைக்காது. 

> தமிழகத்தில் 9000 க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இரண்டு லட்சத்து முப்பது ஆயிரத்திற்கும் (2,30,000) மேலாக இடம் இருந்தும் 40000 பேர் மட்டுமே இதுவரை விண்ணப்பித்துள்ளனர். இதனை கருத்தில் கொண்டு அரசு சேர்க்கைக்கான கால அளவை மே, 26 2018 வரையில் நீடித்துள்ளது.  

> ஒரு திட்டம் அரசாங்கத்தால் அறிவிக்கப்படும் போது அதனை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளுதல் வேண்டும். அப்போது தான் அதற்காக வழங்கப்படும் தொகையானது முறையாக பயன்படுத்தப்படும்.

பகிர்ந்திடுங்கள்

நன்றி
பாமரன் கருத்து

Exit mobile version