Site icon பாமரன் கருத்து

உங்களை வெற்றியாளராக்கும் நான்கு புத்தகங்கள் | விலை ரூ. 299 மட்டுமே | Success Mantra Books In Tamil

World’s Greatest Books For Personal Growth & Wealth (Set of 4 Books) (Tamil) Paperback

 

உங்களது மனதின் அற்புத சக்தியை ஊக்குவித்து உங்களை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்செல்ல உதவும் சிறந்த நான்கு புத்தகங்களின் தொகுப்பு இது.

புத்தகம் எவ்வளவு எடை குறைவாக உள்ளதோ அதைப்போலவே படிப்பதற்கு இலகுவான வார்த்தைகளை தாங்கிய புத்தகங்கள் இவை.

 

1. நண்பர்களை வெற்றி கொள்வதும் மற்றவர்களைக் கவர்ந்திழுப்பதும் எப்படி? [How to Win Friends & Influence People]


 

மக்களைக் கையாள்வதில் உங்கள் திறமைகளை அதிகரித்துக்கொள்ள ஆழ்ந்த விருப்பமும் தெளிவான உறுதியும் உங்களிடமிருந்தால் இந்த நூல் உங்களுக்கானதுதான். மற்றவர் உங்கள்மீது ஆர்வம் காட்டி இரண்டு ஆண்டுகளில் பெறும் நம்பர்களை விட, மற்றவர்களிடம் நீங்கள் ஆர்வம் காட்டுவதன் மூலம் இரண்டே மாதங்களில் அதைவிட அதிகமான நண்பர்களைப் பெற முடியும். 

 

மக்களைக் கையாள்வதில் உள்ள அடிப்படை உத்திகள் தொடங்கி அவர்கள் உங்களை விரும்புமாறு செய்வதற்கான வழிகள் வரை, உங்கள் சிந்தனை வழிமுறைக்கு ஏற்ப மக்களை எப்படி வெற்றி கொள்வது, செயல்கள் நடப்பதற்கு உங்கள் திறமையை எப்படி வளர்த்துக்கொள்வது, ஒரு தலைவராய் இருப்பதற்கான வழிகள், வெறுப்பூட்டாமல் மக்களை மாற்றுவது, விரைவாக நண்பர்களை உருவாக்குவது ஆகியன பற்றிய உள்முகப் பார்வையை இந்த நூல் வழங்குகிறது. 

 

காலம் கடந்தும் அதிக விற்பனை நூலாக விளங்கும் டேல் கார்னகியின் ஹௌ டு வின் பிரண்ட்ஸ் அண்ட் இன்ப்ளூயன்சஸ் பீப்பிள் என்ற இந்த நூல் இப்போது புகழோடும் வெற்றியோடும் இருக்கும் பலருக்கு ஊக்கசக்தியாக விளங்குகிறது. எப்பொழுதும் போல நவீன காலத்திலும் பொருந்துவதாக அமைந்த கொள்கைகளோடு, தொடர்ந்து மக்களின் வெற்றிப் பாதைக்கு இது உதவுகிறது.

2. உங்கள் ஆழ்மனதின் அற்புத சக்தி [The Power Of Your Subconscious Mind]


 

டாக்டர் ஜோசப் மரக்பி அவர்களால் எழுதப்பட்ட முன்னோடி சிந்தனைக் குரல்களில் ஒன்றாக கருதப்படும் குறிப்பிடத்தக்க இந்தப் புத்தகம் உங்கள் ஆழ்மனதின் உண்மையான அதிர்ச்சி தரும் சக்திகளை உங்களுக்காக திறந்து காட்டும். 

 

காலத்தால் கௌரவிக்கப்பட்ட ஆன்மீக ஞானத்தை அறிவுபூர்வ விஞ்ஞான ஆராய்ச்சியுடன் சேர்த்து உங்கள் ஆழ்மனது எப்படி உங்கள் ஒவ்வொரு செயலையும் இயக்குகிறதோ அதை புரிந்துகொண்டு அதன் நம்பமுடியாத சக்தியை கட்டுப்படுத்தக் கற்றுக்கொள்வதன் மூலம் எப்படி உங்கள் அன்றாட வாழ்வின் தரத்தை உயர்த்தலாம் என்பதை விளக்குகிறார் டாக்டர் ஜோசப். 

 

நீங்கள் விரும்பிய பதவி உயர்வு, உங்களுக்கு உரித்தாக வேண்டும் என்று நீங்கள் நினைக்கும் சம்பள உயர்வு, உங்களை ஆட்டுவிக்கும் அச்சக்கோளாறுகள், மற்ற கெட்ட பழக்கங்கள் ஆகியவற்றில் இருந்து நீங்கள் கடந்து வர வேண்டும். மேலும் மற்றவர்களுடனான உங்கள் உறவு மேம்பட வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் இந்த புத்தகம் பலன் தரும். மகிழ்ச்சி,வெற்றி மற்றும் செல்வச்செழிப்புடன் அமைதியுடன் வாழ்வதற்கான உலகை திறக்கும். உங்கள் நம்பிக்கைகளை மாற்றுவதன் மூலம் உங்கள் வாழ்க்கையையும் உங்கள் உலகையும் மாற்றிவிடும்.

3. பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன் [The Richest Man In Babylon]


 

சேமிப்பதன் முக்கியத்துவத்தில் இருந்து செல்வதை சேர்க்கும் அடிப்படைவரை இந்த பாபிலோனின் நீதிக்கதைகள் முடிவிலா பொருளாதார அறிவினை வழங்குகிறது. செல்வந்தன் ஆவதற்கும், அதிர்ஷ்டத்தை வசீகரிப்பதற்கும் தங்கத்தின் ஐந்து சட்டங்களை விவாதிப்பதற்கும் இது உள்ளுணர்வை அளிக்கிறது. 

 

பொருளாதாரத்தை புரிந்துகொள்ள வழிகாட்டியாகவும் தன் சொந்த செல்வத்தை அடைந்து, பாதுகாக்க காலத்தை வென்ற கொள்கைகளைக் கொண்டதாகவும் வழி வழியே வரும் சக்திகளை ஊக்குவிப்பதற்காகவும் இந்தப்புத்தகம் “பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன்”அமைந்திருக்கிறது. இது இன்றும் தரமான முதன்மையில் விற்கும் புத்தகங்களில் ஒன்றாக இருக்கிறது.

4. சிந்தித்துப் பாரு செல்வந்தன் ஆகு [Think and Grow Rich]


 

இதுவரை எழுதப்பட்ட மிகச்சிறந்த உத்வேகமூட்டும் நூல்களில் ஒன்றாக திங்க் அண்டு க்ரோ ரிச் இருக்கும். அனேகமாக நீங்கள் படிக்க வேண்டுமென்று ஆவலாக இருக்கும் தலையாய நிதியியல் புத்தகமாக இது விளங்கும். 1937 இல் வெளியானதில் இருந்து பல தலைமுறைகளை ஊக்கப்படுத்தி இருக்கும் இந்நூல், நெப்போலியன் ஹில்லின் மிகப்பெரும் வெற்றி புத்தகம். தொடங்கிப் பின்பற்றினால் தோல்வி காணவே முடியாத அளவுக்கு உறுதியான வெற்றித் திட்டத்தை, மில்லியன் கணக்கான வியாபாரத் தலைவர்களுக்கு உருவாக்கி கொடுக்கப் பயன்பட்ட புத்தகம். ஆனால் வெறும் பணம் காசு வடிவிலான செல்வதை மட்டுமே தரக்கூடியது என்று கருதுவது சரியாகாது. தனிமனித வளர்ச்சிக்கு ஊக்கமூட்டும் சுய உதவிக்கான புத்தகம் இது. பணம் குவிக்கும் வழியை விவரிப்பதோடு ஒருவர் எத்துறையில் உழைத்தாலும் அதில் வெற்றி அடைவதற்கும், ஒருவர் என்னவாக ஆக விரும்பினாலும் அதுவாக ஆவதற்கும் என்னவெல்லாம் செய்ய விரும்பினாலும் அதை சாதிப்பதற்கும் உதவும் ஆராய்ச்சி நூலக இது விளங்கும். 

 

ஜான் சி மேக்ஸ்வெல் வெளியிட்டுள்ள ‘வாழ்நாளில் படித்தே தீரவேண்டிய புத்தகங்களின் பட்டியலில் ‘திங்க் அண்டு க்ரோ ரிச்’புத்தகம் இடம் பெற்றுள்ளது. பிசினஸ் வீக் இதழ் வெளியிடும் சிறந்த புத்தகங்களின் பட்டியலில் வெளியிட்டுப் பல ஆண்டுகள் ஆகியும் அதிக விற்பனை ஆகும் ஆறாவது சிறந்த புத்தகமாக இது விளங்குகிறது.




எங்களது கட்டுரைகளை நீங்கள் தவறாமல் படிக்க விரும்பினால் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து பின்தொடருங்கள். கூறவே வாட்ஸ்ஆப் பட்டனை அழுத்தி எங்களுடைய குரூப்பில் இணைத்துக்கொண்டு பதிவுகளை பெறுங்கள்



Get Updates in WhatsApp

Share with your friends !
Exit mobile version