Site icon பாமரன் கருத்து

ரஜினி சொன்ன சமூக விரோதி யார் ?

ரஜினி குண்டடிபட்டு இறந்த அனைவரையுமா சமூக விரோதி என சொன்னார் ? அப்படியாக எனக்கு தெரியவில்லை .

அமைதியான ஊர்வலத்தை வன்முறைகளமாக மாற்றியவர்களை , காவலர்களை தாக்கியவர்களை , வாகனங்களை தீயிட்டு எரித்தவர்களை தானே சமூக விரோதி என்றார் .

இது புரியாமல், ஏன் இறந்த சமூக விரோதிகளுக்கு இழப்பீடு ?
போராடியவர்களை சமூக விரோதி என்பதா போன்ற கேள்விகளை முன்வைக்கிறார்கள் ?

தெரிந்து நடக்கிறதா ? அல்லது தெரியாமல் நடக்கிறதா ?

ரஜினி சொல்வதாலேயே சில விஷயங்கள் ஊதி பெரிதாக்கப்படுகின்றனவா ? அல்லது அவருக்கு மக்கள் செல்வாக்கு அதிகம் இருப்பதனால் அவர் இதுபோன்ற கருத்துக்களை கூறுவது சரியாகாது என்பதனாலா ? பாஜகவின் ஆதரவாளர் என்கிற தோற்றம் இருப்பதனாலா ?

உண்மையாலுமே ரஜினி போராடியவர்கள் அனைவரையுமே சமூகவிரோதி என கூறினாரா ?

உங்கள் கருத்து ?

Share with your friends !
Exit mobile version