பாலியல் வன்கொடுமை அவசர சட்டம்
கேபினட் அமைச்சரவை ஒப்புதல் அளித்த தினம் : 21 ஏப்ரல் 2018
குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்த தினம் : 22 ஏப்ரல் 2018
சிறுமிகளை பாலியல் வன்புணர்வு செய்தால் அதிகபட்சமாக மரண தண்டணை வழங்கும் வகையில் சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களின் ஒப்புதலையும் பாலியல் வன்கொடுமை அவசர சட்டம் பெற்றுவிட்டது .
பாலியல் வன்கொடுமை அவசர சட்டம் எந்த சட்டப்பிரிவுகளில் மாற்றம் :
பாலியல் வன்கொடுமை அவசர சட்டம் பின்வரும் சட்டப்பிரிவுகளில் மாற்றம் செய்கின்றது .
IPCஎனப்படும் இந்தியன் பீனல் கோடு , Criminal Procedure Code, Protection of Children from Sexual Offences (POCSO) Act and Indian Evidence Act
கற்பழிப்பு குற்றங்களுக்கு இனி வழங்கப்படும் பாலியல் வன்கொடுமை அவசர சட்டம் தண்டணை விவரங்கள் :
12 வயதுக்கு உட்பட்ட குழந்தையை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தினால் குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் சிறை அல்லது வாழ்நாள் முழவதும் சிறை அல்லது மரண தண்டணை .
குழுவாக பாலியல் வன்புணர்வு குற்றத்தில் ஈடுபட்டால் வாழ்நாள் முழுவதும் சிறை மற்றும் மரண தண்டணை.
16 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தினால் சிறை தண்டணை 10 ஆண்டுகளில் இருந்து 20 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது .
பெண்களை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தினால் சிறை தண்டணை 7 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது .
பாலியல் வன்கொடுமை வழக்குகள் அனைத்தும் இரண்டு மாத காலத்திற்குள் முடிக்கப்பட வேண்டும் .
மேல்முறையீடுகள் அனைத்தும் 6 மாத காலத்திற்குள்ளாக முடிக்கப்பட வேண்டும் .
விரைந்து முடிக்க அத்தனை உதவிகளும் செய்யப்பட வேண்டும் .
16 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை வன்புணர்வு செய்த வழக்கில் கைதுசெய்யப்பட்டவர்களுக்கு ஜாமீன் கிடையாது .
பாமரன் கருத்து
