Site icon பாமரன் கருத்து

வெயிட்டர் டு ஐஏஎஸ் ஆபிசர் | ஜெய்கணேஷ் ஐஏஎஸ் வெற்றிக்கதை

வெயிட்டர் டு ஐஏஎஸ் ஆபிசர் | ஜெய்கணேஷ் ஐஏஎஸ் வெற்றிக்கதை

ஜெய்கணேஷ் என்பவர் சத்யம் சினிமாஸ் அருகே உள்ள ஒரு சிறிய உணவகத்தில் உணவு பரிமாறும் வெயிட்டர் வேலையை பார்த்துக்கொண்டே சிவில் சர்வீசஸ் தேர்வுக்காக படித்தவர். 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற சிவில் சர்வீஸ் தேர்வில் 156 ஆம் இடம் பிடித்து அசத்தினார். 

வறுமையால் வாடும் பலருக்கு கல்வி என்பது பெரிய அளவிலான மாற்றத்தை நிகழ்த்தி இருக்கிறது. அது கல்வியால் மட்டுமே செய்திட முடிந்த ஒரு விசயம். ஏழ்மையான நிலையில் உள்ள பலருக்கு மிகப்பெரிய படிப்புகளை படிக்கவும் மிகப்பெரிய வேலைகளில் சேர முயற்சிப்பதிலும் பெரிய தயக்கம் இருக்கிறது. “நம்மால் இதெல்லாம் முடியுமா?” என்ற அவர்களின் சந்தேகத்தை உடைத்தெறிய பல எளியவர்களின் வெற்றிக்கதைகள் இந்த சமூகத்தில் உண்டு. அதிலே ஒன்று தான் ஜெய்கணேஷ் ஐஏஎஸ் அவர்களின் வெற்றிக்கதை.

ஐ.ஏ.எஸ் க்கு படிப்பது எப்படி?

தமிழகத்தின், ஆம்பூர் அருகே உள்ள வினவமங்கலம் என்ற தொலைதூர கிராமத்தில் உள்ள ஏழ்மையான, பிற்படுத்தப்பட்ட குடும்பத்தில் பிறந்தவர் தான் ஜெய்கணேஷ். வேலூரில் உள்ள அரசு தந்தை பெரியார் தொழில்நுட்பக் கழகத்தில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் இளங்கலைப் பட்டம் பெற்ற ஜெய்கணேஷ், ஐ.ஏ.எஸ்., பணியில் சேர வேண்டும் என்ற தனது கனவைத் தொடர, பல சிறிய சிறிய வேலையைச் செய்ய வேண்டியிருந்தது.

நான்கு உடன்பிறப்புகளில் மூத்தவரான இவர், பட்டப்படிப்பு முடிந்து சென்னையில் வந்து சேர்ந்தார். “எனது கிராமத்தில் இருந்த போது மூன்று முறை சிவில் சர்வீஸ் தேர்வுக்கு விண்ணப்பித்தும் அதிலே பங்கேற்க முடியாமல் போனது. சிவில் சர்வீஸ் தேர்வில் சரியாக கலந்துகொள்ள வேண்டுமெனில் சென்னையில் இருக்க வேண்டும் என்பதை உணர்ந்தேன். அதனால், ஐஏஎஸ் பயிற்சிக்காக அரசு நடத்தும் அகில இந்திய நிறுவனத்தில் அனுமதி பெற்றேன். இங்கு வந்த பிறகு, எனது மாத மெஸ் பில் ரூ.600 செலுத்தவும், பயணம் செய்யவும் என்ன வேலை கிடைத்தாலும் அதைச் செய்ய வேண்டியிருந்தது,” என்று நினைவு கூர்ந்தார்.

முதலில் சத்யம் சினிமாஸில் மாதச் சம்பளம் ரூ.3,000க்கு டிக்கெட் கொடுத்து வேலை பார்த்தார். “ஆனால் விரைவில், சிவில் சர்வீசஸ்களுக்குத் தயாராவதற்கு எனக்கு போதுமான நேரம் கொடுக்காத காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரையிலான வேலையில் சிக்கிக் கொண்டேன். இதன் விளைவாக, 2004 இல் நான் முதன்மைத் தேர்வில் தோல்வியடைந்தேன். வேலையை விட்டு விலக முடிவு செய்தேன். ஒரு சிறிய உணவகத்தில் உணவு பரிமாறும் இன்னொரு வேலை கிடைத்தது. அதிர்ஷ்டவசமாக, உணவகத்தில் நான் படிக்க நேரம் கிடைத்தது,” என்கிறார் ஜெய்கணேஷ்.

ஜெய்கணேஷ் சென்னையில் இருந்த மூன்று வருடங்களில் தனது நண்பர்களுடன் தங்கி, மற்றவர்களுடன் தொடர்பில் இருக்க அவர்களது தொலைபேசிகளைப் பயன்படுத்தினார். இன்று, ஆறு முறை தோல்வியுற்ற பிறகு பெற்ற வெற்றிக்குப் பிறகு, ஜெய்கணேஷ் இவ்வாறு கூறுகிறார்: “இது முழுவதும் ஒரு போராட்டம்.”

இப்படி ஒவ்வொரு துறையிலும் ஒரு சாதனையாளர் ஏழ்மையான சூழலில் இருந்து வந்துகொண்டே தான் இருக்கிறார்கள். அதிலே நீங்களும் ஒருவராக இருக்க வேண்டும் எனில் வறுமையை ஒரு காரணமாக நினைக்கலாம் முயற்சி செய்திடுங்கள். 

கடினமான சூழலில் IAS அதிகாரிகளாக ஆனவர்கள் வெற்றிக்கதையை இங்கே படிக்கலாம்

எங்களது கட்டுரைகளை நீங்கள் தவறாமல் படிக்க விரும்பினால் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து பின்தொடருங்கள். கூறவே வாட்ஸ்ஆப் பட்டனை அழுத்தி எங்களுடைய குரூப்பில் இணைத்துக்கொண்டு பதிவுகளை பெறுங்கள்.



Get Updates in WhatsApp

Share with your friends !
Exit mobile version