Site icon பாமரன் கருத்து

எரிக்கின்ற வெயிலில் ஏழை சிறுமி !

வெற்று காலில்
எரிகிற வெயிலில்
தலைக்கு மறைவின்றி

வாடாத வெள்ளரிக்கு
திரை மறைவு போட்டாள்
வாடிய சிறுமி ஒருத்தி

காரணம் கேட்டேன் …

முகத்தை துடைத்துக்கொண்டு
காய்ந்த உதடுகளை
கஷ்டப்படுத்தி புன்னகை செய்தால்

புரிந்தது அவள் சொல்லாமலே ..

வாங்கும் நீங்கள்
வாடிய ஏழையை விட
வாடாத வெள்ளரிக்குத்தானே
முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள் என்று …

எத்தனை எத்தனை
தொழில் முனைவோர்கள்
சாலை ஓரங்களில்
வயது வித்தியாசம் பாராமல் …

இந்த கொடும் வெயில்
அறைக்குள் வேலை பார்த்த
நமக்குத்தான் கொடும் வெயில்
அந்த சிறுமியை பொறுத்தவரையில் …

வருபகவான் ஏமாற்றி அணைத்திட்ட
ஏழையவளின் சிறு அடுப்பிணை
வெள்ளரிவிற்று  எரிய வைக்கவே
சூரியபகவானின் இந்த கொடும் வெயில் !

ஸ்ரீ

Share with your friends !
Exit mobile version