ஒவ்வொருவரும் சம்பாதிக்கிறோம். ஆனால், சம்பாதிக்கும் பணம் எப்படி செலவாகிறது என்பதை சிலர் மட்டுமே தெரிந்துகொள்கிறார்கள். அவர்கள் தான் பணத்தை திறம்பட கையாண்டு வாழ்க்கையில் வென்றவர்கள்.
சம்பளம் வந்த முதல் வாரத்தில் நல்லா இருக்கும். ஆனால், மாதம் இறுதியில்…
“பணம் எங்கே போச்சு?”
“எப்படி கணக்கே இல்லாம பணம் முடிஞ்சிடுச்சு?”
“சம்பளம் போதலையே…”
என்று பல குடும்பங்கள் குழப்பமடைகின்றன.
உலகப் புகழ்பெற்ற மேலாண்மை நிபுணர் பீட்டர் ட்ரக்கர் இப்படியாக சொல்கிறார்…
“நீங்கள் கணக்கிடும் போது மேம்படுகிறது”
இதை நீங்கள் எதனோடும் ஒப்பிடலாம். உங்களது செலவினத்தை நீங்கள் கண்காணிக்கும் போது செலவுகள் மேம்படுகின்றன. செலவுகள் மேம்படும் போது சேமிப்பு கூடுகிறது. சேமிப்பு கூடும் போது வாழ்க்கை மேம்படுகிறது.
இந்த கட்டுரையில் நாம் பின்வருவனவற்றை விரிவாக பார்க்க இருக்கிறோம்.
- செலவு பதிவேடு என்றால் என்ன?
- தினசரி பதிவு செய்வது ஏன் அவசியம்?
- செலவுகளை பதிவிடுவது எப்படி நம் வாழ்க்கையை மாற்றும்?
- தினசரி செலவுகளை பதிவு செய்ய 10 நடைமுறை முறைகள் என்னென்ன?
- ஒரு குடும்பம், ஒரு ஊழியர், ஒரு மாணவர் — எல்லாருக்கும் பொருத்தமான வழிகள்
- குறைகளை எப்படி அடையாளம் காண்பது?
- ஒரே ஒரு பழக்கத்தால் banking balance எப்படி உயரும்?
இது ஒரு complete money management article. ஆகவே தவறாமல் படியுங்கள்.
செலவு பதிவேடு என்றால் என்ன?
செலவு பதிவேடு என்பது,
ஒரு நாள் முழுக்க எவ்வளவு பணம் செலவானது
எதற்கெல்லாம் செலவானது
எந்த வகை செலவுகளில் அதிகம் செல்கிறது
எவை தேவையில்லாத செலவுகள்
இந்த அனைத்தையும் ஒரு இடத்தில் எழுதுவது மட்டுமே.
அது, ஒரு சிறிய நோட்டுப் புத்தகமாக இருக்கலாம், உங்கள் மொபைல் notes இல் இருக்கலாம், Google sheet அல்லது Excel இல் இருக்கலாம் அல்லது இதற்காகவே இருக்கும் ஒரு expense tracking app இல் இருக்கலாம்.
எதுவாக இருந்தாலும் பரவாயில்லை.
முக்கியமானது என்ன?
👉 நீங்கள் ஒவ்வொரு செலவையும் நினைவில் வைத்துக் கொண்டு பதிவு செய்வது தான்.
தினசரி செலவுகளை பதிவு செய்வது ஏன் மிக முக்கியமானது?
பெருவாரியான மக்கள் கேட்கின்ற கேள்வி இதுதான். செலவுகளை ஏன் கண்காணிக்க வேண்டும்? அதனால் என்ன மாற்றம் நிகழ்ந்துவிட போகிறது என்பதுதான். அதற்கான, விரிவான பதில்களை இப்போது பார்க்கலாம்.
1. பணம் எங்கே போகிறது என்ற தெளிவு கிடைக்கும் (Financial Clarity)
இந்த clarity இல்லாததால் தான் பலர் பின்வரும் சிக்கல்களை சந்திக்கிறார்கள்.
அதிக கடன் வாங்குகிறார்கள்
credit card-ஐ தவறாகப் பயன்படுத்துகிறார்கள்
savings இல்லாமல் திணறுகிறார்கள்
பண அழுத்தத்தில் சிக்குகிறார்கள்
உதாரணத்திற்கு,
நீங்கள் ஏதோ ஒரு விசயத்திற்கு தினசரி 30 முதல் 50 வரைக்கும் செலவு செய்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம்.
மாதத்திற்கு ₹1500
வருடத்திற்கு ₹18,000
இந்த செலவை உங்களை அறியாமலே நீங்கள் செய்துகொண்டு இருப்பீர்கள்.
ஆனால், நீங்கள் செலவுகளை குறித்து வைத்துக்கொண்டு வந்தீர்கள் என்றால் இதனை உங்களால் கண்டுபிடித்துவிட முடியும்.
2. தேவையில்லாத செலவுகளை உடனே கண்டுபிடிக்க முடியும் (Identify Wasteful Spending)
நாம் சேமிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தவராகவே இருந்தாலும், பல நேரங்களில் தேவையில்லாத விசயங்களுக்காக செலவு செய்துகொண்டு இருப்போம். உதாரணத்திற்கு,
Online small purchases
Food delivery
Auto/Taxi rides
OTT subscriptions
Discounts-க்கு ஆசைப்பட்டு வாங்கும் பொருள்கள்
UPI small payments
இப்படியான செலவுகள் உங்களுக்கு நினைவில் தங்காது. ஆனால், நீங்கள் செலவுகளை குறித்து வைத்துக்கொள்ளும் பழக்கம் கொண்டவராக இருந்தால் உங்களால் எளிதில் இவற்றை அடையாளம் கண்டுகொள்ள முடியும்.
Read More : மாத சம்பளம் ஏன் போதவில்லை? செலவுகளை கட்டுப்படுத்தும் ரகசியங்கள் இதோ!
3. Budget plan உருவாக்குவது எளிதாகிறது (Better Budget Control)
பட்ஜெட் போட்டு குடும்பம் நடத்துவது தான் சிறந்தது. ஆனால், அதனை பின்பற்ற முடியாதவர்களுக்கு செலவு பதிவேடு தான் சிறந்த தீர்வு.
நீங்கள் தினசரி செலவுகளை பதிவு செய்திடும் போது,
உணவு செலவு எவ்வளவு?
பயணம் செலவு எவ்வளவு?
Shopping-ல் வீணாகிறதா?
ஆன்லைன் செலவுகள் அதிகமா?
என்பதை தெளிவாக உங்களால் அறிந்துகொள்ள முடியும்.
இதனால் realistic budget plan உருவாக்க முடியும்.
4. சேமிப்பும் முதலீடும் தானாக அதிகரிக்கும் (Increase Savings & Investments)
சேமிக்க முடியவில்லை என்று பலர் புலம்புவதை பார்த்து இருக்கிறேன். ஆனால், அவர்கள் கோட்டை விட்ட இடம் “பணம் எங்கே செலவாகிறது” என்பதை அறியாமல் இருப்பதே.
உங்களுடைய செலவு பதிவேட்டின் மூலமாக….
“இங்கே தான் அதிகமாக செலவு ஆகிறது. இதை குறைத்தால் சேமிக்கலாம்!” என்பதை எளிதாக கண்டுபிடித்துவிடலாம்.
உதாரணத்திற்கு,
தினசரி ஸ்னாக்ஸ் சாப்பிட ₹25 என்றால் மாதத்திற்கு 750, அதுவே வருடத்திற்கு 9000. இதில் நீங்கள் பாதி அளவு சேமித்தாலும் ஒரு மாதம் SIP போட்டுவிடலாம்.
5. கடனை தடுக்க உதவுகிறது (Avoid Unnecessary Debt)
முதலில் வாங்கிக்கொள்ளுங்கள், பின்னர் கட்டிக்கொள்ளுங்கள் என்ற வசதியை கிரெடிட் கார்டு வழங்குகிறது. இதனால், பலர் பணம் இல்லை என்றாலும் கூட வாங்குவதை நிறுத்துவது இல்லை. ஆனால், திருப்பி செலுத்தும் போது கடனில் சிக்கிவிடுகிறார்கள்.
ஒருவேளை நீங்கள் செலவை தொடர்ச்சியாக எழுதி வைத்திருக்கும் நபராக இருந்தால்….
credit card மூலமாக என்ன வாங்கினோம், தேவையில்லாமல் வாங்கியது என்ன என்பனவற்றை எளிதில் கண்டுகொள்ள முடியும். இதனால் தேவையில்லாமல் வாங்கியவற்றை எளிதில் அடையாளம் கண்டு திருத்திக்கொள்ள முடியும்.
6. நிதி ஒழுக்கம் வருகிறது (Financial Discipline)
நீங்கள் செலவு கணக்கை பதிவிட துவங்கிவிட்டாலே பாதி சிக்கல்கள் குறைந்துவிடும். அதுவே பெரும் நிம்மதியை தரும்.
இதனை நீங்கள் செய்திடும் போது,
ஆசைக்காக செலவுகளை குறைக்கும்
வேண்டாத shopping-ஐ நிறுத்தும்
சிறு-small expenses-ஐ குறைத்துவிடும்
“இது தேவையா?” என்று கேட்கும்
இதுவே நிதி வளர்ச்சியின் துவக்கப்புள்ளி.
7. குடும்ப நிதி புரிதல் அதிகரிக்கும் (Family Financial Transparency)
பெரும்பாலான குடும்ப சண்டைகள் “பணம் எங்கே போனது?” என்ற கேள்வியால்தான் உருவாகின்றன.
வரவு செலவு குறிப்பேடு இருந்தால், கணவன்–மனைவி இருவரும் செலவுகளை எளிதாக புரிந்துகொள்ள முடியும். இருவரும் சேர்ந்து சேமிப்பு என்ற இலட்சியத்தை நோக்கி நகரலாம்.
தினசரி செலவுகளை பதிவு செய்ய எளிய முறைகள்
சிறிய நோட்டுப் புத்தகம் : இது அனைத்து வயதினருக்கும் ஏற்றது. ஆனால், வீட்டிற்கு வந்தவுடன் தினமும் செலவினங்களை குறிக்கும் பழக்கம் கொண்டவர்களுக்கு இது உகந்தது.
மொபைல் ஆப் : செலவினங்களை குறித்து வைத்துக்கொள்ளும் Personal Finance ஆப்கள் சந்தையில் ஏராளமாக கிடைக்கின்றன. நீங்கள் அவற்றை பயன்படுத்தலாம்.
Google Sheet / Excel : நீங்கள் ஏற்கனவே இவற்றை பயன்படுத்தும் அனுபவம் கொண்டவராக இருந்தால் இவை இரண்டுமே சூப்பர் சாய்ஸ்.
தினசரி செலவினங்களை குறித்துக்கொள்வது, வாரம் ஒருமுறை செலவினங்களை பார்ப்பது, பிரிவுகளாக செலவை வகைப்படுத்தி வைத்துக்கொள்வது போன்றவை நீங்கள் கடைபிடிக்க வேண்டிய சில வழிமுறைகள்.
மக்கள் பொதுவாக செய்திடும் சில தவறுகள்
தினசரி எழுதாமல், ஒரே நாளில் எல்லாம் எழுதுவது. இதனால் பல செலவுகள் மறந்து போகலாம்.
UPI இல் மேற்கொள்ளும் சிறு செலவுகளை பதிவு செய்யாமல் இருப்பது, ஆண்டுவாக்கில் பார்த்தால் இந்த செலவுத்தொகை அதிகமாக இருக்கும்.
“Miscellaneous” என்ற ஒரு பிரிவில் அனைத்தையும் சேர்த்துவிடுவது, இதனால் சரியாக செலவை கண்காணிக்க முடியாது.
Review செய்யாமல் இருப்பது, இது பாதி வேலை. இப்படி இருந்தால் எதற்காக நீங்கள் செலவை எழுதி வைத்தீர்களோ அந்த இலக்கை அடைய முடியாது.
முடிவுரை
நீங்கள் செலவு கணக்குகளை எழுதி வைக்க சில நிமிடங்கள் தினமும் செலவு செய்தால் போதும். ஆனால், வாழ்நாள் முழுக்க அது பலன் தரும்.
வாழ்க்கையில் முன்னேறியவர்கள் அதிகமாக சம்பாதித்தவர்கள் இல்லை. மாறாக, அதிகமாக சேமித்தவர்கள். குறைவான சம்பளத்தை திறம்பட நிர்வகித்ததால் தான் அவர்கள் முன்னேறி உள்ளார்கள்.
உங்களது பணம் எங்கு செல்கிறது என்பதை கண்காணியுங்கள். பணத்தை வெல்லுங்கள்.
Read More : Money Mindset என்றால் என்ன? பணத்தைப் பற்றிய நம்பிக்கைகள் வாழ்க்கையை எப்படி பாதிக்கும்?

