Site icon பாமரன் கருத்து

காமராஜருக்கு இடம் தர கருணாநிதி மறுத்தது உண்மையா ? | Did Karunanithi not given place at marina for kamarajar?

நேற்று (ஆகஸ்டு 07 2018 ) முன்னால் முதல்வரும் திமுக தலைவருவான கருணாநிதி அவர்கள் இயற்கை எய்தினார் . கருணாநிதி அவர்களின் நெடுநாள் ஆசை , அண்ணாவின் அருகிலேயே தன்னுடைய நினைவிடமும் அமைக்கப்பட வேண்டும் என்பது . 

கருணாநிதி மறைவுக்காக கதறி அழும் தொண்டர்கள்
கருணாநிதி மறைவுக்காக கதறி அழும் தொண்டர்கள்

முறைப்படி திமுகவின் செயல்தலைவர் ஸ்டாலின்  மற்றும் அவரது குடும்பத்தினர் தமிழக முதல்வரிடம் சென்று மெரினாவில் இடம் ஒதுக்குவது உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்தனர் .

 

ஆனால் தமிழக அரசு மிக முக்கிய கோரிக்கையான மெரினாவில் இடம் ஒதுக்குவது என்பதனை நிராகரித்து , அண்ணா பல்கலைகழக வளாகத்திற்கு அருகே காமராசர் மற்றும் ராஜாஜி அவர்களின் நினைவு மண்டபங்களுக்கு அருகே 2 ஏக்கர் இடம் வழங்கப்படும் என அறிவித்தது . பிறகு நீதிமன்றம் சென்று மெரினாவில் கருணாநிதி அவர்களுக்கு இடமும் ஒதுக்கப்பட்டுவிட்டது

 

 சமூக வலைதளத்தில் பரவிடும் செய்தி 

 

காமராசருக்கு மெரினாவில் இடம்தர மறுத்ததாக பரவிடும் மீம்ஸ்

 

இதற்கு இடையில் காமராஜருக்கு மெரினாவில் இடம்தர அப்போதய முதல்வர் கருணாநிதி எதிர்த்ததன் பாவம் தான் இன்று கருணாநிதிக்கு மெரினாவில் இடம் கிடைப்பதில் சிக்கலை உண்டாக்கியுள்ளது . மேலும் முதல்வராக இருக்கும்போது இறப்பவர்களுக்குத்தான் மெரினாவில் இடம் என்று கருணாநிதி சொன்னதாகவும் மீம்ஸ்கள் அதிரடியாக பகிரப்பட்டன.

 

 காமராஜருக்கு இடம் தர கருணாநிதி மறுத்தது உண்மையா?

 

இதுகுறித்து அறிவதற்காக இணையதளத்தில் தேடியபோது முன்னனி செய்தி நிறுவனமான The News Minute இல் இதற்கான பதில் கொடுக்கப்பட்டுள்ளது . 

 

ராஜாஜி ஹாலில் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்திவிட்டு வந்த ராஜாஜி கொள்ளுப்பேரன் CR கேசவன் என்பவரிடம் கருணாநிதி குறித்து பரவிடும் மீம்ஸ் குறித்து கேட்கப்பட்டது அதற்கு “அதில் உண்மையில்லை , ராஜாஜி அவரது விருப்பப்படிதான் அடக்கம் செய்யப்பட்டார் . கிண்டியில் இருக்கக்கூடிய ராஜாஜி நினைவாலயத்தை  வடிவமைத்தவர் கருணாநிதி தான் “ என்றார் .

 

காமராஜருக்கு கருணாநிதி மெரினாவில் இடம் தர மறுத்தாரா என முன்னனி காங்கிரஸ் தலைவர்களிடம் கேட்கப்பட்டது . அதற்க்கு அவர்கள் அளித்த பதிலில் ….

கருணாநிதி அவர்கள் ராஜாஜி , காமராசர் போன்றவர்களுக்கு இடம் தர மறுத்தார் என்பதில் உண்மையில்லை .

 

காமராசர் இறந்த தினம் (02, October 1975) காந்தி ஜெயந்தி , ஆகையால் தான் காமராசருக்கு காந்தி மண்டபத்தில் இடம் ஒதுக்கப்பட்டது . மேலும் காமராசருக்கு மெரினாவில் இடம்தர வேண்டும் என எவரும் கேட்கவும் இல்லை , அரசிடம் முறையிடவும் இல்லை என்பது குறிப்பிடதக்கது.  

 

 மேலும் அவர்கள் கூறிடும்போது காமராசர் இறந்தபிறகு அவரது இறுதிச்சடங்கு நிகழ்வுகளை முன்னின்று நடத்தியதே கலைஞர் தான் என்றார்கள் . 

கருணாநிதி மற்றும் காமராசர்

காமராசர் இறந்தபோது இந்தியாவில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டு இருந்திட்ட நேரம் ( 25 Jun 1975 – 21 Mar 1977) , இந்திய அளவில் அவசர நிலையை எதிர்த்து நின்றவர்களில் திமுகவும் அதன் தலைவரான கருணாநிதிக்கும் முக்கிய பங்கு உண்டு .

 

 

ராதாகிருஷ்ணன் ட்விட்டர் பதிவு

 

ஆனாலும் காங்கிரஸ் கட்சிக்காரரான காமராஜரின் மறைவை கேட்டவுடன் முதல் ஆளாக சென்றவர்களில் கருணாநிதியும் ஒருவர் . அங்கு போதிய விளக்கு வசதி இல்லாதபட்சத்தில் கருணாநிதி அவருடைய காரின் முகப்பு விளக்கினை பயன்படுத்தியும் உடன்வந்தோரின் முகப்பு விளக்கினை பயன்படுத்தியும் நிலைமையை சரி செய்ததாகவும் , அவருக்கு திருப்தி ஏற்பட்டவுடன் தான் புறப்பட்டு சென்றதாகவும் கூறப்படுகின்றது .

 

மேலும் சம்பிரதாயமாகவே காங்கிரஸ் (இந்திய கட்சிகள்) கட்சியை சேர்ந்த தலைவர்கள் இறக்கும்போது (ராஜாஜி , காமராசர் , பக்தவச்சசலம் ) போன்றோருக்கு கிண்டியில் இருக்கக்கூடிய காந்தி மண்டபத்தில் இடம் ஒதுக்கப்படுகிறது . 

திராவிட இயக்கங்களை சேர்ந்த தலைவர்கள் (அண்ணா , எம்ஜிஆர் , ஜெயலலிதா , கருணாநிதி ) போன்றோருக்கு மெரினா கடற்கரையில் இடம் ஒதுக்கபடுகிறது . 

கருணாநிதி அவர்களிடம் தமிழகத்தின் சிறந்த முதல்வர் யார் என கேட்டபோது சற்றும் தயங்காமல் “நமது காமராசர் தான் “ என பதிலளித்தது போதும் கருணாநிதி காமராசர் மீது கொண்டிருந்த மதிப்பினையும் அன்பையும் காட்டுவதற்கு.

 

நிச்சயமாக இந்த பதிவு உண்மைகளை உங்களுக்கு சொல்லியிருக்கும் என நம்புகின்றேன் . 

உங்களது கருத்துக்களை பதிவிடுங்கள் .

 

பாமரன் கருத்து
பாமரன் கருத்து

Share with your friends !
Exit mobile version