Site icon பாமரன் கருத்து

காலனுக்கு உரைத்தல் – பாரதியார் கவிதைகள்


காலா!உனை நான் சிறு புல்லென மதிக்கிறேன்; என்தன் 

காலருகே வாடா! சற்றே உனை மிதிக்கிறேன்-அட (காலா)

(சரணங்கள்)

வேலாயுத விருதினை மனதிற் பதிக்கிறேன்-நல்ல 

வேதாந்த முரைத்த ஞானியர் தமை யெண்யித் துதிக்கிறேன்-ஆதி

மூலா வென்றுகதறிய யானையயைக் காக்கவே-நின்தன் 

முதலைக்கு நேர்ந்ததை மறந்தாயோ,கெட்ட மூடனே? அட-(காலா)

ஆலால முண்டவனடி சரணென் றமார்க்கண்டன்-தன 

தாவி கவரப்போய் நீ பட்ட பாட்டினை யறிகுவேன்-இங்கு

நாலாயிரம் காதம் விட்டகல்!உனை விதிக்கிறேன்-ஹரி 

நாராயண னாகநின் முன்னே உதிக்கிறேன்-அட (காலா)

பாரதியார்


மேலும் பல பாரதியார் கவிதைகள் படிக்க Click Here

Share with your friends !
Exit mobile version