Site icon பாமரன் கருத்து

அவசரம் 108 மொபைல் ஆப் , ஒரு பார்வை

தமிழக அரசு அவசரம் 108 என்கிற ஆண்ட்ராய்டு ஆப் ஒன்றினை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது .

காவல்துறை , விபத்து , தீயணைப்பு உள்ளிட்ட உதவிகளுக்கு இதன் மூலமாக தொடர்புகொள்ள முடியும் .

பயன்படுத்துவது எப்படி :

பிளேஸ்டோரில் டவுண்லோடு செய்து உங்கள் விவரங்களை பதிவு செய்துகொள்ளவெண்டும் .

OTP வெரிபிகேஷன் மூலமாக உங்களது மொபைல் எண் பதிவு செய்யபடும் .

அவசர உதவி தேவைப்படும்போது உங்களது மொபைலில் இன்டர்நெட் மற்றும் GPS இரண்டையும் ஆன் செய்துவிட்டு உங்களது தற்போதய இடத்தினை சுட்ட வேண்டும் .

பிறகு அழைப்பினை மேற்கொள்ளலாம் .

உங்களுக்கு அருகில் இருக்கக்கூடிய ஆம்புலன்ஸை உங்களிடம் பேசக்கூடிய உதவியாளர் அனுப்பிவைப்பார் .

ஆலோசனை சொல்லும் நண்பர்கள் :

பல நண்பர்கள் இந்த ஆப்பை பயன்படுத்திவிட்டு மேம்படுத்த ஆலோசனையெல்லாம் கூறியிருக்கின்றனர் .

நல்ல முயற்சி , நாமும் பயன்படுத்தலாமே .

பகிருவோம் !

நன்றி
பாமரன் கருத்து

Share with your friends !
Exit mobile version