Site icon பாமரன் கருத்து

முரண்

தலைவாழை இலையோரமும்
இடமில்லாமல் உணவு நிரப்பி
ஆசுவாசமாக உண்ணுவோரும்

சுருட்டி வீசிய எச்சிலிலையில்
கலந்துகிடக்கும் மிச்ச உணவை
அடித்து பிடித்து உண்ணுவோரும்

ஓருலகில்
ஓரிடத்தில்
இருப்பது
முரண் !

Exit mobile version