Site icon பாமரன் கருத்து

ரசிக்கிறேன் உன்னை

பூவின் வாசனையை 

காற்று களவாடினால் 

கடலின் அலைகளை 

கரை களவாடினால் 

வானவில்லின் வண்ணத்தை

மேகம் களவாடினால்

நிலவின் வெண்மையை 

இரவு களவாடினால் 

அழகிங்கு இருக்குமா 

ரசிக்கத்தான் முடியுமா 

அவை அங்கங்கே இருத்தல்தானே 

அழகின் ரகசியம் 

பேரழகி உன்னை 

பெயரறியா நானும் 

களவாடாமல்  போகக் 

காரணமும் அதுதான் 

ஆனால் தினமும்

ரசிக்கிறேன் உன்னை…..

Exit mobile version