Site icon பாமரன் கருத்து

கனவு தேசம் – என் கவிதை

கனவு தேசம் – என் கவிதை

நெருடல் இல்லாத காற்று
சுழற்சிக்கு உட்படாத குடிநீர்
இடித்துக்கொள்ளாத வீடுகள்
மனம் விரும்பும் மனிதர்கள்….

ஐந்தரை வயதில் ஆரம்பக்கல்வி
அனைவருக்கும் ஒரே பள்ளி
அரசே நடத்தும் மருத்துவமனை
ஆசையில்லாத ஆட்சியாளர்கள் …

இந்தியா வரைபடம்

இலவசம் விரும்பாத மக்கள்
ஊழல் செய்யாத ஆட்சியாளர்கள்
தட்டி கேட்கும் பாமரன்கள்
அனைத்திலும் ஐம்பது சத பெண்கள்

கண்டுபிடிப்பில் புதுமை
கருத்தியலில் முதுமை
மறைந்துபோன வறுமை
அனைத்திலும் முதன்மை

என் கனவு தேசம்…

Share with your friends !
Exit mobile version